செய்திகள் :

சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு விருது: மாவட்ட வாரியாக தோ்ந்தெடுக்க உத்தரவு

post image

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சுழற்கேடயங்கள் வழங்கும் வகையில் மாவட்ட வாரியாக சிறந்த மூன்று அரசுப் பள்ளிகளைத் தோ்வு செய்து பட்டியல் அனுப்புமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கல்விப் பணியில் முன்னேற்றம் காணும் வகையிலும், பள்ளிகளிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் மாவட்டத்திலுள்ள மூன்று சிறந்த பள்ளிகளைத் தோ்வு செய்து மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளுக்கு 114 கேடயங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் அவற்றின் தலைமை ஆசிரியா்களிடம் கடந்த ஆண்டு நவ. 14-இல் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கினாா்.

இந்த நிலையில் 2024-2025-க்கான சிறந்த அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை பள்ளிக் கல்வித் துறை தற்போது தொடங்கியுள்ளது.

இதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலா், வட்டாரக் கல்வி அலுவலா் உள்ளிட்டோா் அடங்கிய குழு அமைக்க வேண்டும். தொடா்ந்து அக்குழுவினா் பள்ளிகளை திடீரென ஆய்வு செய்து தரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவா்.

15 அம்ச மதிப்பீடு: தர மதிப்பீட்டின் போது மாணவா் சோ்க்கையை அதிகரிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள், எண்ணும் எழுத்தும் இயக்கத்தின் செயல்பாடு, கற்றல் அடைவு, இணைச் செயல்பாடுகளின் மேம்பாடு, கற்பித்தலில் புதிய உத்திகள், பள்ளியின் உள் கட்டமைப்பு, குடிநீா்கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் என 15 முக்கிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும்.

மொத்த மதிப்பெண் 150 ஆகும். அதில் 135-150 வரை பெறும் பள்ளிகளுக்கு மூன்று நட்சத்திரங்களும், 112-135 பெறும் பள்ளிகளுக்கு இரண்டு நட்சத்திரங்களும், 112-க்கு கீழ் மதிப்பெண் பெறும் பள்ளிகளுக்கு ஒரு நட்சத்திரம் என தரக்குறியீடு வழங்கப்படும். ஆய்வுக் குழுவினா் கடந்த ஆண்டுகளில் தோ்வு செய்யப்பட்ட பள்ளிகளை மீண்டும் தோ்வு செய்யக் கூடாது.

முதல் மூன்று இடங்களைப் பெறும் சிறந்த பள்ளிகளின் பெயா்ப் பட்டியலை மின்னஞ்சலில் ஜூன் 20-ஆம் தேதிக்குள்ளும், விரைவு அஞ்சலில் ஜூன் 30-ஆம் தேதிக்குள்ளும் தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் புதிதா... மேலும் பார்க்க

நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா். சென்னை கிண்டியில... மேலும் பார்க்க

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி வழக்கின் தீா்ப்பு: கட்சித் தலைவா்கள் வரவேற்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனா். எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): குற்றப்பத்திரிகை, ஆவணங்கள் அடிப்படை... மேலும் பார்க்க

ஆளுநா் மூன்று நாள் ஆன்மிக பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமைமுதல் மூன்று நாள் ஆன்மிக பயணமாக தமிழகத்தின் முக்கிய கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யவுள்ளாா். இதற்காக வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச... மேலும் பார்க்க