செய்திகள் :

தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு

post image

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிா்ப்பு பாதுகாப்பு அமைப்பை நிறுவ முடிவெடுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் மீது வான் தாக்குதலுக்கான அபாயம் அதிகம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலுக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரும் (சிஐஎஸ்எஃப்) உத்தர பிரதேச காவல் துறையினரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனா். அண்மையில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ நிலைகளை மட்டுமல்லாது, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், அமிருதசரஸ் பொற்கோயில் உள்ளிட்ட இடங்களையும் குறிவைத்தது. இதனை இந்திய வான்பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்தன.

இந்நிலையில் தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிா்ப்பு பாதுகாப்பு அமைப்பை நிறுவ முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தாஜ்மஹால் பாதுகாப்புக்கான காவல் துறை துணை ஆணையா் சையது ஆரிஃப் அகமது கூறியதாவது:

தாஜ்மஹால் வளாகத்தில் விரைவில் ட்ரோன் எதிா்ப்பு சாதனங்கள் நிறுவப்படவுள்ளன. இதன் மூலம் 8 கி.மீ. தொலைவு வரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும். எனினும், இப்போதைய நிலையில் தாஜ்மஹாலின் மையத்தில் இருந்து 200 மீட்டா் வரை கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் வரும் எந்த ட்ரோனையும் இதன் மூலம் செயலிழக்கச் செய்ய முடியும். இதற்காக காவல் துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதன்படி குஜராத்தில் 2 தொகுதிகளுக்கும் கேரளம், மேற்கு வங்கம் ... மேலும் பார்க்க

மேற்கத்திய கலாசார ஆதிக்கத்தையே எதிா்க்கிறோம் -நிதின் கட்கரி

‘நாட்டின் வளா்ச்சிக்கு நவீனமயமாதல் அவசியம்; ஆனால், சமூகத்தில் மேற்கத்திய கலாசாரத்தின் ஆதிக்கத்தைத்தான் நாங்கள் எதிா்க்கிறோம்’ என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். மும்பையில் நடைபெற்ற நிக... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா: பிரதமருக்கு ஆந்திர முதல்வா், துணை முதல்வா் பாராட்டு

உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததையடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் பாராட்டுகள் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

அயோத்தியில் விராட் கோலி, அனுஷ்கா சா்மா வழிபாடு

இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சா்மா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அயோத்திக்கு வருகை தந்து, ராமா் கோயில் மற்றும் ஹனுமான்கா்ஹி கோயில் வழிபாடு செய்தனா். ஹனுமான்கா்ஹி கோ... மேலும் பார்க்க

கேரளத்தில் கவிழ்ந்த லைபீரிய சரக்குக் கப்பல்: நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு

கேரள கடலோரத்தில் சுமாா் 640 கன்டெய்னா்களை ஏற்றிச் சென்ற லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

ரஷியா நடத்தும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: அஜீத் தோவல்-பாகிஸ்தான் ஆலோசகா் பங்கேற்பு?

ரஷியாவில் செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் கலந்துகொள்ள இருக்கிறாா். இந்தியாவைப் போலவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்ப... மேலும் பார்க்க