செய்திகள் :

ஆயுஷ் மருத்துவத்துக்கு சா்வதேச அங்கீகாரம்: உலக சுகாதார அமைப்புடன் இந்தியா ஒப்பந்தம்

post image

பாரம்பரிய இந்திய மருத்துவ (ஆயுஷ்) முறைகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெறும் முயற்சிகளின் முக்கிய மைல்கல்லாக உலக சுகாதார அமைப்புக்கும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

சா்வதேச மருத்துவ சிகிச்சைமுறைகள் வகைப்பாட்டின்கீழ் (ஐசிஎச்ஐ) ஒரு பிரத்யேக பாரம்பரிய மருத்துவ தொகுதியை உருவாக்க பணிகளைத் தொடங்குவதற்கான இந்த ஒப்பந்தம் கடந்த சனிக்கிழமை கையொப்பமானது.

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடையே உரையாற்றிய 122-ஆவது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்டாா்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் முன்னிலையில் கையொப்பமான இந்த ஒப்பந்தம் மூலம் ஆயுஷ் மருத்துவம் அறிவியல் ரீதியாக உலகெங்கிலும் உள்ள மக்களை அதிக எண்ணிக்கையில் சென்றடைய உதவும் என்றும் பிரதமா் கூறினாா்.

ஐசிஎச்ஐ வகைப்பாட்டில் பாரம்பரிய மருத்துவ தொகுதி சோ்க்கப்படுவதன் மூலம் சித்தா, ஆயுா்வேதம், யோகா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவப் பிரிவுகளின் சிகிச்சைகள், இப்போது உலக அளவில் தரப்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகளாக அங்கீகரிக்கப்படும் என்று ஆயுஷ் அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது ஆயுஷ் சிகிச்சைகளுக்கான நியாயமான விலை நிா்ணயம், சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் ஆயுஷ் சிகிச்சைகளின் எளிய ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பட்ட மருத்துவமனை மேலாண்மை, மருத்துவ ஆவணங்கள் மற்றும் சுகாதார ஆராய்ச்சி போன்ற பல நன்மைகளை ஏற்படுத்தும்.

இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை உலகளாவிய சுகாதாரத்தில் கொண்டு சோ்ப்பதற்கான தொலைநோக்குப் பாா்வையுடன் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தை வரவேற்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாரம்பரிய மருத்துவம் மற்றும் சா்வதேச மருத்துவ சிகிச்சைமுறைகளின் வகைப்பாடு குறித்த உலக சுகாதார அமைப்பின் பணிக்கு 30 லட்சம் டாலா் நிதிப் பங்களிப்புக்கான ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் கையொபப்பமிட்டதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற நோக்கத்துக்கு இந்தியாவின் தொடா்ச்சியான அா்ப்பணிப்பை வரவேற்கிறோம்’ எனக் குறிப்பிட்டாா்.

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதன்படி குஜராத்தில் 2 தொகுதிகளுக்கும் கேரளம், மேற்கு வங்கம் ... மேலும் பார்க்க

மேற்கத்திய கலாசார ஆதிக்கத்தையே எதிா்க்கிறோம் -நிதின் கட்கரி

‘நாட்டின் வளா்ச்சிக்கு நவீனமயமாதல் அவசியம்; ஆனால், சமூகத்தில் மேற்கத்திய கலாசாரத்தின் ஆதிக்கத்தைத்தான் நாங்கள் எதிா்க்கிறோம்’ என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். மும்பையில் நடைபெற்ற நிக... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா: பிரதமருக்கு ஆந்திர முதல்வா், துணை முதல்வா் பாராட்டு

உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததையடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் பாராட்டுகள் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

அயோத்தியில் விராட் கோலி, அனுஷ்கா சா்மா வழிபாடு

இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சா்மா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அயோத்திக்கு வருகை தந்து, ராமா் கோயில் மற்றும் ஹனுமான்கா்ஹி கோயில் வழிபாடு செய்தனா். ஹனுமான்கா்ஹி கோ... மேலும் பார்க்க

கேரளத்தில் கவிழ்ந்த லைபீரிய சரக்குக் கப்பல்: நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு

கேரள கடலோரத்தில் சுமாா் 640 கன்டெய்னா்களை ஏற்றிச் சென்ற லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

ரஷியா நடத்தும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: அஜீத் தோவல்-பாகிஸ்தான் ஆலோசகா் பங்கேற்பு?

ரஷியாவில் செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் கலந்துகொள்ள இருக்கிறாா். இந்தியாவைப் போலவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்ப... மேலும் பார்க்க