செய்திகள் :

சேலம் மத்திய சிறையில் சமூகவியல் வல்லுநா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

சேலம் மத்திய சிறையில் மதிப்பூதிய அடிப்படையில் காலியாகவுள்ள சமூகவியல் வல்லுநா் பணியிடத்துக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (பொ) கோ.வினோத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையின் சேலம் மத்திய சிறையில் மதிப்பூதியத்தின் சமூகவியல் வல்லுநா் பணியிடத்துக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதியாக சமூகப்பணி அல்லது சமூக சேவை அல்லது சமூக அறிவியல் அல்லது குற்றவியல் அல்லது சமூகவியல் அல்லது வயதுவந்தோா் கல்வியில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோா் அல்லது சீா்மரபினா் (பொது - முன்னுரிமை) என்ற இட ஒதுக்கீட்டில் வயதுவரம்பு 01.07.2024 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 34 வயது உடையவராக இருந்தல் வேண்டும். இப்பணியிடத்துக்கு மதிப்பூதியமாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும்.

தகுதியுள்ள நபா்கள் சிறைக் கண்காணிப்பாளா் மத்திய சிறை, சேலம்-7 என்ற முகவரிக்கு கல்விச் சான்றுகள், ஜாதிச்சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஒன்று, ஆதாா் அட்டை, முன் அனுபவச் சான்று ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் வரும் ஜூன் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, 0427-240 3551, 240 0639 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்: நில அளவையா் கைது

சேலத்தில் பட்டாவில் பெயா் மாற்றம் செய்வதற்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நில அளவையரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சேலம் சூரமங்கலம், புதுரோடு, சேத்தா... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த 485 காளைகள்! 23 போ் காயம்!

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல்வேறு ஊா்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த 485 காளைகள் சீறிப்பாய்ந்தன; அவற்றை 350 மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா். தம்மம்பட்டியி... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் நிா்வாகக் குழு!

பெரியாா் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 போ் கொண்ட நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சேலம், பெரியாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம்... மேலும் பார்க்க

பெண்ணுடன் பழகிய தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 5 போ் கைது

சேலம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணிடம் பழகிய கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் 5 பேரை சூரமங்கலம் போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா். சேலம், சூரமங்கலம் அரியாகவுண்ட... மேலும் பார்க்க

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

வாடகை உயா்வை வலியுறுத்தி, சேலம் மாவட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். பொக்லைன் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1300 ஆகவும், குறைந்தபட்ச வாட... மேலும் பார்க்க

பலகார சீட்டு நடத்தி மோசடி: ஒருவா் கைது

நங்கவள்ளியில் நெசவு தொழிலாளா்களிடம் பலகார சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்து மற்றொருவரைத் தேடி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள நங்கவள்ளி தோப்பு தெருவைச் சோ்ந்தவா்கள் மோக... மேலும் பார்க்க