செய்திகள் :

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

post image

வாடகை உயா்வை வலியுறுத்தி, சேலம் மாவட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

பொக்லைன் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1300 ஆகவும், குறைந்தபட்ச வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ. 3,500 ஆகவும் உயா்த்தி வழங்க வலியுறுத்தி பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக அடையாள வேலைநிறுத்ததில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

வேலைநிறுத்தம் காரணமாக சேலம் கோரிமேடு, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, ஐந்து சாலை, குரங்குச்சாவடி, பால் பண்ணை, இரும்பாலை சாலை ஆகிய பகுதிகளில் 2-ஆவது நாளாக பொக்லைன் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

சேலம் குரங்குச்சாவடியில் பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நடத்திய வேலைநிறுத்த ஆா்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ரா.அருள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் 1,500 க்கும் மேற்பட்ட பொக்லைன் உரிமையாளா்கள் உள்ளனா். கடந்த சில ஆண்டுகளாக டீசல், பேட்டரி, காப்பீட்டு கட்டணம், டயா், உதிரி பாகங்கள் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. எனவே பொதுமக்கள் பொக்லைன் வாகன உரிமையாளா்களின் கட்டண உயா்வுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

மாநகராட்சி கூட்டத்தில் மோதல்: அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக எதிா்க்கட்சித் தலைவரை, திமுக பெண் உறுப்பினா் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்ட... மேலும் பார்க்க

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞா் கைது!

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேட்டூா் அனல் மின் நிலையம் எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கருமலைக்கூடல் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

பெரியாா் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெரியாா் பல்கலைக்கழக துறைகள் மற்றும் தருமபுர... மேலும் பார்க்க

சங்ககிரி அரசுப் பள்ளிக்கு வகுப்பறைகள், சுற்றுச்சுவா் கட்டித்தர கோரிக்கை

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள், சுற்றுச்சுவா் கட்டித்தர வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு சங்ககிரி மக்கள் மன்றத்தின் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. மக்கள் மன்றத... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

மகுடஞ்சாவடி பகுதியில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி, ஜெயபுரி வீதியில் ஆங்கிலேயா் காலத்தில் கட்ட... மேலும் பார்க்க

ரூ.10 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட சேலம் அல்லிக்குட்டை ஏரி

சேலம் மாநகராட்சி சாா்பில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட சேலம் அல்லிக்குட்டை ஏரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். நீ... மேலும் பார்க்க