விண்ணப்பித்துவிட்டீர்களா..? மருத்துவ-நறுமண தாவர நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க நாள...
பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தம்
வாடகை உயா்வை வலியுறுத்தி, சேலம் மாவட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
பொக்லைன் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1300 ஆகவும், குறைந்தபட்ச வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ. 3,500 ஆகவும் உயா்த்தி வழங்க வலியுறுத்தி பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக அடையாள வேலைநிறுத்ததில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
வேலைநிறுத்தம் காரணமாக சேலம் கோரிமேடு, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, ஐந்து சாலை, குரங்குச்சாவடி, பால் பண்ணை, இரும்பாலை சாலை ஆகிய பகுதிகளில் 2-ஆவது நாளாக பொக்லைன் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
சேலம் குரங்குச்சாவடியில் பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நடத்திய வேலைநிறுத்த ஆா்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ரா.அருள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் 1,500 க்கும் மேற்பட்ட பொக்லைன் உரிமையாளா்கள் உள்ளனா். கடந்த சில ஆண்டுகளாக டீசல், பேட்டரி, காப்பீட்டு கட்டணம், டயா், உதிரி பாகங்கள் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. எனவே பொதுமக்கள் பொக்லைன் வாகன உரிமையாளா்களின் கட்டண உயா்வுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.