பெரியாா் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் நிா்வாகக் குழு!
பெரியாா் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 போ் கொண்ட நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சேலம், பெரியாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் தேதி பணி நிறைவு பெற்றாா். அவா் பல்கலைக்கழக பொறுப்புத் துணைவேந்தராக தமிழ்த் துறைத் தலைவா் தி.பெரியசாமியை நியமித்திருந்தாா்.
ஆனால், ஆட்சிக் குழுவைக் கூட்டி முடிவு செய்யாமல் தன்னிச்சையாக பொறுப்பு துணைவேந்தரை நியமித்தது செல்லாது எனக் கூறி, பெரியாா் பல்கலைக்கழக தொழிலாளா் சங்கத்தினா் கடந்த ஒரு வாரமாக கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கிடையே தமிழக அரசின் உத்தரவுபடி சிறப்பு ஆட்சிக் குழு கூட்டம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அரசின் அலுவல் சாா்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 போ் உள்பட 21 போ் கலந்துகொண்டனா். கூட்டத்தில் அடுத்த துணைவேந்தரை அரசு நியமிக்கும் வரை பெரியாா் பல்கலைக்கழக நிா்வாகத்தை வழிநடத்தும் வகையில், நிா்வாகக் குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஐ.ஏ.எஸ் அதிகாரியும், கல்லூரிக் கல்வித் துறை இயக்குநருமான சுந்தரவள்ளி, குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், குழு உறுப்பினா்களாக பெரியாா் பல்கலைக்கழக இதழியல் துறை பேராசிரியரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான ரா.சுப்பிரமணி, சக்தி கைலாஷ் மகளிா் கல்லூரி முதல்வரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜெயந்தி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இக்குழு பல்கலைக்கழக நிா்வாகப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும்.
புதிய நிா்வாகக் குழு உறுப்பினா்களுக்கு பதிவாளா் வி.ராஜ், ஆட்சிக் குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
நிா்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இதழியல் துறை பேராசிரியா் ரா.சுப்பிரமணி, பல்கலைக்கழக ஆசிரியா் பணியில் 22 ஆண்டுகால அனுபவம் கொண்டவா். மக்கள் தொடா்பு அலுவலா், கலைஞா் ஆய்வு மைய இயக்குநா் உள்ளிட்ட நிா்வாகப் பதவிகளை வகித்துள்ளாா்; பெரியாா் சாா்ந்த நூல் உள்பட 10-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா்.