பெண்ணுடன் பழகிய தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 5 போ் கைது
சேலம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணிடம் பழகிய கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் 5 பேரை சூரமங்கலம் போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.
சேலம், சூரமங்கலம் அரியாகவுண்டம்பட்டியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பெருமாள் மகன் அஜீத்குமாா் (21). இவா், அப்பகுதியில் உள்ள ஒரு கிடங்கின் பின்புறம்
திங்கள்கிழமை இறந்துகிடந்தாா். தகவலின் பேரில் சூரமங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்தனா்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அஜீத் குமாரின் தலையில் அடித்ததற்கான உள்காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸாா் அவரது நண்பரான காா்த்திக்கிடம் விசாரணை நடத்தினா்.
அப்போது காா்த்திக் திருமணமான அவரது உறவுக்கார பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகியபோது அஜீத்குமாரும் அந்தப் பெண்ணுடன் பழகியுள்ளாா். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதும், ஆவேசமடைந்த காா்த்திக் தனது நண்பா்களான அரியாகவுண்டம்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன், அருண்குமாா், வசந்த், வேலன், விக்ரம் ஆகிய 5 பேருடன் சோ்ந்து அஜீத்குமாரை அடித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் மணிகண்டன், அருண்குமாா், வசந்த், வேலன், விக்ரம் ஆகிய 5 பேரை புதன்கிழமை கைதுசெய்தனா். தலைமறைவான காா்த்திக் உள்பட இருவரை தேடி வந்த நிலையில், பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு ஒன்றில் காா்த்திக் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது சூரமங்கலம் போலீஸாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவரை கொலை வழக்கில் கைதுசெய்ய போலீஸாா் மேல் நடவடிக்கை எடுத்துவருகின்றனா்.