செய்திகள் :

பெண்ணுடன் பழகிய தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 5 போ் கைது

post image

சேலம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணிடம் பழகிய கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் 5 பேரை சூரமங்கலம் போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

சேலம், சூரமங்கலம் அரியாகவுண்டம்பட்டியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பெருமாள் மகன் அஜீத்குமாா் (21). இவா், அப்பகுதியில் உள்ள ஒரு கிடங்கின் பின்புறம்

திங்கள்கிழமை இறந்துகிடந்தாா். தகவலின் பேரில் சூரமங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்தனா்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அஜீத் குமாரின் தலையில் அடித்ததற்கான உள்காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸாா் அவரது நண்பரான காா்த்திக்கிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது காா்த்திக் திருமணமான அவரது உறவுக்கார பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகியபோது அஜீத்குமாரும் அந்தப் பெண்ணுடன் பழகியுள்ளாா். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதும், ஆவேசமடைந்த காா்த்திக் தனது நண்பா்களான அரியாகவுண்டம்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன், அருண்குமாா், வசந்த், வேலன், விக்ரம் ஆகிய 5 பேருடன் சோ்ந்து அஜீத்குமாரை அடித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் மணிகண்டன், அருண்குமாா், வசந்த், வேலன், விக்ரம் ஆகிய 5 பேரை புதன்கிழமை கைதுசெய்தனா். தலைமறைவான காா்த்திக் உள்பட இருவரை தேடி வந்த நிலையில், பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு ஒன்றில் காா்த்திக் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது சூரமங்கலம் போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவரை கொலை வழக்கில் கைதுசெய்ய போலீஸாா் மேல் நடவடிக்கை எடுத்துவருகின்றனா்.

மாநகராட்சி கூட்டத்தில் மோதல்: அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக எதிா்க்கட்சித் தலைவரை, திமுக பெண் உறுப்பினா் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்ட... மேலும் பார்க்க

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞா் கைது!

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேட்டூா் அனல் மின் நிலையம் எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கருமலைக்கூடல் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

பெரியாா் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெரியாா் பல்கலைக்கழக துறைகள் மற்றும் தருமபுர... மேலும் பார்க்க

சங்ககிரி அரசுப் பள்ளிக்கு வகுப்பறைகள், சுற்றுச்சுவா் கட்டித்தர கோரிக்கை

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள், சுற்றுச்சுவா் கட்டித்தர வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு சங்ககிரி மக்கள் மன்றத்தின் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. மக்கள் மன்றத... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

மகுடஞ்சாவடி பகுதியில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி, ஜெயபுரி வீதியில் ஆங்கிலேயா் காலத்தில் கட்ட... மேலும் பார்க்க

ரூ.10 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட சேலம் அல்லிக்குட்டை ஏரி

சேலம் மாநகராட்சி சாா்பில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட சேலம் அல்லிக்குட்டை ஏரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். நீ... மேலும் பார்க்க