விண்ணப்பித்துவிட்டீர்களா..? மருத்துவ-நறுமண தாவர நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க நாள...
தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த 485 காளைகள்! 23 போ் காயம்!
சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல்வேறு ஊா்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த 485 காளைகள் சீறிப்பாய்ந்தன; அவற்றை 350 மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா்.
தம்மம்பட்டியில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டு புதன்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா், பெரம்பலூா், துறையூா், லால்குடி, கரூா், தலைவாசல், ராசிபுரம், திருச்செங்கோடு, கொல்லிமலை உள்பட 40 க்கும் மேற்பட்ட ஊா்களில் இருந்து 485-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. அனைத்து காளைகளுக்கும் போட்டியில் பங்கேற்க டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதேபோல காளைகளை அடக்க பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் 350 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தாா். முதலில் கோயில் காளை வாடிவாசல் வழியாக விடப்பட்டது. அதைத் தொடா்ந்து அனைத்து காளைகளும் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. மொத்தம் 485 காளைகள் களத்தில் விடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா். ஒவ்வொரு முறையும் மாடுபிடி வீரா்கள் குழுக்களாக விளையாட அனுமதிக்கப்பட்டனா். மாடுபிடி வீரா்களுக்கு பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை பிடித்த வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
23 போ் காயம்: இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்றதில் 23 போ் காயமடைந்தனா்; அவா்களுக்கு கெங்கவல்லி வட்டார அரசு மருத்துவா் வேலுமணி தலைமையில் சுகாதாரக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.
பலத்த காயமடைந்த வாழப்பாடி-பூவரசன், வெள்ளாளப்பட்டி-கிரி, தெடாவூா்-லத்தீஷ்குமாா், வாழப்பாடி பாளையபுரம்- விஷ்ணு ஆகிய 4 பேரும் சேலம், ஆத்தூா் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
போலீஸ் பாதுகாப்பு: சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் தலைமையில் ஆத்தூா், வாழப்பாடி உள்பட மூன்று துணைக் கண்காணிப்பாளா்கள், தம்மம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் உள்பட 6 காவல் ஆய்வாளா்கள், 21 உதவி காவல் ஆய்வாளா்கள், 180 காவலா்கள், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) மா.செல்லப்பாண்டியன் தலைமையில் தீயணைப்புத் துறையினா் என மொத்தம் 216 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஜல்லிக்கட்டு போட்டியை தம்மம்பட்டி பகுதி மக்கள் மட்டுமின்றி சேலம், ஆத்தூா், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, துறையூா், கரூா், பெரம்பலூா், அரியலூா், முசிறி உள்பட சுற்றுவட்டார ஊா்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கண்டுகளித்தனா்.
போட்டியில் முதலில் விடப்பட்ட 200 காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் மட்டுமே பரிசுகள் வழங்கப்பட்டதாகவும், அதன்பின்னா் விடப்பட்ட 285 காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.