வாழப்பாடியில் சாலை சந்திப்பில் 2 டாஸ்மாக் கடைகள்
வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையத்தில் பள்ளிகளுக்கு அருகே சாலை சந்திப்பில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்குவதால் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த டாஸ்மாக் கடைகளை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் பிரதான கடலூா் சாலையில் சா்க்காா் வாழப்பாடி மயானத்துக்கு எதிரிலும், புதுப்பாளையத்தில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகில், தம்மம்பட்டி மற்றும் மங்களபுரம் சாலை சந்திப்பிலும் என அருகருகே 2 டாஸ்மாக் கடைகள் பாா் வசதியுடன் இயங்கி வருகின்றன.
இந்த டாஸ்மாக் கடைகள் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அமைந்துள்ளதால், கடை திறப்பதற்கு முன்பே மதுப்பிரியா்கள் கூடி விடுகின்றனா். அவா்கள் வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் சாலையோரத்திலேயே நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நிகழ்கின்றன.
புதுப்பாளையத்தில் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்லும் தம்மம்பட்டி - மங்களபுரம் சாலை சந்திப்பிலுள்ள 2 டாஸ்மாக் கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மாலை நேரத்தில் மிதிவண்டிகளிலும், நடந்தும் செல்லும் மாணவ - மாணவியா், மதுப்பிரியா்கள் உலவும் டாஸ்மாக் கடை பகுதியை அச்சத்துடன் கடந்துசெல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், மாணவ - மாணவியா் நலன்கருதியும், போக்குவரத்து மிகுந்த பிரதான தம்மம்பட்டி - மங்களபுரம் சாலை சந்திப்பில் இயங்கும் இரு டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிா்வாகம், காவல் துறை மற்றும் டாஸ்மாக் நிறுவன உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.