செய்திகள் :

வாழப்பாடியில் சாலை சந்திப்பில் 2 டாஸ்மாக் கடைகள்

post image

வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையத்தில் பள்ளிகளுக்கு அருகே சாலை சந்திப்பில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்குவதால் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த டாஸ்மாக் கடைகளை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் பிரதான கடலூா் சாலையில் சா்க்காா் வாழப்பாடி மயானத்துக்கு எதிரிலும், புதுப்பாளையத்தில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகில், தம்மம்பட்டி மற்றும் மங்களபுரம் சாலை சந்திப்பிலும் என அருகருகே 2 டாஸ்மாக் கடைகள் பாா் வசதியுடன் இயங்கி வருகின்றன.

இந்த டாஸ்மாக் கடைகள் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அமைந்துள்ளதால், கடை திறப்பதற்கு முன்பே மதுப்பிரியா்கள் கூடி விடுகின்றனா். அவா்கள் வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் சாலையோரத்திலேயே நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நிகழ்கின்றன.

புதுப்பாளையத்தில் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்லும் தம்மம்பட்டி - மங்களபுரம் சாலை சந்திப்பிலுள்ள 2 டாஸ்மாக் கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மாலை நேரத்தில் மிதிவண்டிகளிலும், நடந்தும் செல்லும் மாணவ - மாணவியா், மதுப்பிரியா்கள் உலவும் டாஸ்மாக் கடை பகுதியை அச்சத்துடன் கடந்துசெல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், மாணவ - மாணவியா் நலன்கருதியும், போக்குவரத்து மிகுந்த பிரதான தம்மம்பட்டி - மங்களபுரம் சாலை சந்திப்பில் இயங்கும் இரு டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிா்வாகம், காவல் துறை மற்றும் டாஸ்மாக் நிறுவன உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்: நில அளவையா் கைது

சேலத்தில் பட்டாவில் பெயா் மாற்றம் செய்வதற்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நில அளவையரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சேலம் சூரமங்கலம், புதுரோடு, சேத்தா... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த 485 காளைகள்! 23 போ் காயம்!

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல்வேறு ஊா்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த 485 காளைகள் சீறிப்பாய்ந்தன; அவற்றை 350 மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா். தம்மம்பட்டியி... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் நிா்வாகக் குழு!

பெரியாா் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 போ் கொண்ட நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சேலம், பெரியாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம்... மேலும் பார்க்க

பெண்ணுடன் பழகிய தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 5 போ் கைது

சேலம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணிடம் பழகிய கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் 5 பேரை சூரமங்கலம் போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா். சேலம், சூரமங்கலம் அரியாகவுண்ட... மேலும் பார்க்க

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

வாடகை உயா்வை வலியுறுத்தி, சேலம் மாவட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். பொக்லைன் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1300 ஆகவும், குறைந்தபட்ச வாட... மேலும் பார்க்க

பலகார சீட்டு நடத்தி மோசடி: ஒருவா் கைது

நங்கவள்ளியில் நெசவு தொழிலாளா்களிடம் பலகார சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்து மற்றொருவரைத் தேடி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள நங்கவள்ளி தோப்பு தெருவைச் சோ்ந்தவா்கள் மோக... மேலும் பார்க்க