செய்திகள் :

மாநிலங்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு

post image

நமது சிறப்பு நிருபர்

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு படிவங்களில் அதிமுக பொதுச் செயலர் என்கிற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி கையொப்பமிட உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்கும் வகையில் அனுமதிக்கக் கூடாது எனக் கூறி அதிமுக பிரமுகர் வா. புகழேந்தி தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்தவர் எனத் தன்னைக் குறிப்பிடும் வா. புகழேந்தி, தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது வருமாறு:

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அங்கீகரிக்கும் படிவங்களில் அதிமுக சார்பில் கையொப்பமிட எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல எந்தவொரு அணியின் தலைவருக்கும் உரிமை இல்லை.

2022-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 03-02-2023 அன்று அளித்த தீர்ப்பின்படி, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பான இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் செயல்முறைக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு அப்பால் அல்ல என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஈரோடு கிழக்கு பேரவைத் தேர்தலுக்கு பின்னர் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அல்லது வேறு எந்தப் பிரிவினரும், அதிமுக சார்பாக படிவங்களில் கையொப்பமிட அதிகாரமில்லை என்பதே உச்சநீதிமன்ற தீர்ப்பின் பொருளாகும்.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் 2024, மார்ச் 15-ஆம் தேதியிட்ட தில்லி உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் விசாரணையின் செயல்பாட்டில் அதிமுக விவகாரம் உள்ளது.

மேலும், சிவில் நீதிமன்றத்தில் வழக்குகள் முடிவடையும்வரை அதிமுகவின் எந்தப் பிரிவுக்கும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்கிற வாதங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநிலங்களவைத் தேர்தலுக்கு அதிமுக பொதுச் செயலர் என்கிற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி கையொப்பமிடும் ஏஏ மற்றும் பிபி படிவங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என மனுவில் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் ... மேலும் பார்க்க

காலமானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.புரட்சிமணி (59) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை (மே 28)காலமானார்.இவர் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநி... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் புதிதா... மேலும் பார்க்க

நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா். சென்னை கிண்டியில... மேலும் பார்க்க

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க