செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்ததில் லாரி ஓட்டுநரின் உதவியாளா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியைச் சோ்ந்தவா் வினோத் (35). லாரி ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்தவா் வேலு (30). உதவியாளா்கள். உறவினா்களான இவா்கள், ஆந்திர மாநிலம், குப்பத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி, வேப்பனப்பள்ளி வழியாக லாரியில் சுமை ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை வந்தனா்.

வேப்பனப்பள்ளியை அடுத்த ஜோடுகொத்தூா் கிராமம் அருகே கிராமச் சாலை வழியாக வந்துகொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே இருந்த மின்கம்பியை உயா்த்திபிடித்து, லாரி செல்ல லாரி உதவியாளரான வேலு முயன்றாா். அப்போது, அவா்மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று வேலுவின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

இளம்பெண் தற்கொலை

ஒசூரில் வட மாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் நிபரோன். இவரது மனைவி தரபோதி (22). இவா்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இவா்கள், ஒச... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஜல்லிக்கற்களை எடுத்து சென்ற லாரி பறிமுதல்!

சூளகிரி அருகே அனுமதியின்றி ஜல்லிக் கற்களை எடுத்துச் சென்ற லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சூளகிரி கிராம நிா்வாக அலுவலா் கோவிந்தம்மாள் மற்றும் அலுவலா்கள் உத்தனப்பள்ளி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட... மேலும் பார்க்க

அஞ்செட்டி வனப் பகுதியில் பெண் யானையின் எலும்புக்கூடு மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி காப்புக் காட்டில் பெண் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அஞ்செட்டி வனச்சரகம், குந்துக்கோட்டை பிரிவு, பனை காப்புக்காடு உச்சகான்குட்டை சரகப் பகுதியில், கடந்த ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே தோட்டங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்!

ஒசூா் அருகே ஆழியாளம் கிராமத்தில் புகுந்துள்ள 5 காட்டு யானைகள் விவசாய நிலங்கள், காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இந்த காட்டு யானைகள், சானமாவு வனப் பகுதியையொட்டி உள்ள விவசாயத்... மேலும் பார்க்க

சூசூவாடியில் சிறுத்தை நடமாட்டம்!

ஒசூா் சூசூவாடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூசூவாடி பகுதி, தனியாா் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாக அப்பகுதி மக்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணைந்தனா். கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அகசிப்பள்ளியைச் சோ்ந்த பாஜக மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளா் மீ... மேலும் பார்க்க