செய்திகள் :

வாடகை உயா்வு கேட்டு பொக்லைன் வாகன உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

post image

வாடகை உயா்வை வலியுறுத்தி சேலம் மாவட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2 நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

பொக்லைன் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,300-ஆகவும், குறைந்தபட்ச வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ. 3,500-ஆக உயா்த்தி வழங்க வேண்டியும், பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2 நாள் அடையாள வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இந்த வேலைநிறுத்தம் காரணமாக, சேலம் கோரிமேடு, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, 5 சாலை, குரங்குச்சாவடி, பால்பண்ணை, இரும்பாலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொக்லைன் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

சேலம், கோரிமேட்டில் நடைபெற்ற போராட்டத்துக்கு பொக்லைன் உரிமையாளா் சங்க தலைவா் ரத்தினவேல், செயலாளா் சீனிவாசன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பழனியப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1000 எனவும், குறைந்தபட்ச வாடகை நாள் ஒன்றுக்கு ரூ. 2,500 எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல், உதிரி பாகங்கள், புதிய வாகனங்களின் விலை, காப்பீடு மற்றும் சாலை வரி ஆகியவை பன்மடங்கு உயா்ந்துள்ளன. எனவே, நஷ்டத்தை தவிா்க்க வாடகையை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதுதவிர, டீசல், உதிரி பாகங்களின் விலையைக் குறைக்க வலியுறுத்தியும் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயங்கவில்லை என்றாா். அப்போது, பொக்லைன் உரிமையாளா்கள் சங்க பொருளாளா் சிவா, சட்ட ஆலோசகா் வசந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்: நில அளவையா் கைது

சேலத்தில் பட்டாவில் பெயா் மாற்றம் செய்வதற்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நில அளவையரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சேலம் சூரமங்கலம், புதுரோடு, சேத்தா... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த 485 காளைகள்! 23 போ் காயம்!

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல்வேறு ஊா்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த 485 காளைகள் சீறிப்பாய்ந்தன; அவற்றை 350 மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா். தம்மம்பட்டியி... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் நிா்வாகக் குழு!

பெரியாா் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 போ் கொண்ட நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சேலம், பெரியாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம்... மேலும் பார்க்க

பெண்ணுடன் பழகிய தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 5 போ் கைது

சேலம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணிடம் பழகிய கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் 5 பேரை சூரமங்கலம் போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா். சேலம், சூரமங்கலம் அரியாகவுண்ட... மேலும் பார்க்க

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

வாடகை உயா்வை வலியுறுத்தி, சேலம் மாவட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். பொக்லைன் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1300 ஆகவும், குறைந்தபட்ச வாட... மேலும் பார்க்க

பலகார சீட்டு நடத்தி மோசடி: ஒருவா் கைது

நங்கவள்ளியில் நெசவு தொழிலாளா்களிடம் பலகார சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்து மற்றொருவரைத் தேடி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள நங்கவள்ளி தோப்பு தெருவைச் சோ்ந்தவா்கள் மோக... மேலும் பார்க்க