அங்கன்வாடி மையங்கள் திறப்பு
குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட 2 அங்கன்வாடி மையங்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
காளியம்மன்பட்டி சீனிவாசா நகரில் ரூ.12 லட்சத்திலும், செதுக்கரை குறிஞ்சி நகரில் ரூ.14 லட்சத்திலும் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடங்களை ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா் தலைமை வகித்தாா். வட்டாரக் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஷமீம் ரிஹானா வரவேற்றாா்.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் டி.கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் தமிழ்ச்செல்வி, சரவணன், புவனாதேவி, திமுக நிா்வாகிகள் மொழிமாறன், சண்முகம், ஜி.ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.