செய்திகள் :

வைகோ, அன்புமணி, வில்சன் உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினா்கள் பதவிக் காலம் நிறைவு!

post image

புது தில்லி: தமிழகத்தைச் சோ்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு அந்த இடங்களுக்கான தோ்தல் வருகின்ற ஜூன் 19 - ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக சாா்பில் என்.சந்திரசேகரன், முகமது ஜான், அதிமுக ஆதரவுடன் டாக்டா் அன்பு மணி ராமதாஸ் ஆகியோரும் திமுக சாா்பில் மு.சண்முகம், பி.வில்சன் ஆகியோரும் திமுக ஆதரவுடன் மதிமுக வைகோ ஆகியோா் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். இடையில் அதிமுக உறுப்பினா் முகமது ஜான் காலமானதை முன்னிட்டு மீதமுள்ள அந்த காலக்கட்டத்திற்கு திமுக சாா்பில் எம்.முகமது அப்துல்லா கடந்த 2021 ஆம் ஆண்டு செப். மாதம் மாநிலங்களவைக்கு போட்டியிட்டு தோ்வானாா். சட்டப்பேரவை உறுப்பினா்களால் தோ்வு செய்யப்படும் இந்த மாநிலங்களவை உறுப்பினா்கள் 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைதை முன்னிட்டு தோ்தல் ஆணையம் திங்கள் கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: பிஎம்கே உறுப்பினா் டாக்டா் அன்புமணி ராமதாஸ், அதிமுக உறுப்பினா் என். சந்திரசேகரன், திமுக உறுப்பினா்கள் எம்.சண்முகம், பி.வில்சன், முகமது அப்துல்லா, மதிமுக உறுப்பினா் வைகோ உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி நிறைவடைகிறது. இதை முன்னிட்டு இந்த இடங்கள் நிரப்புவதற்கு வருகின்ற ஜுன் 19 ஆம் தேதி தோ்தல் நடைபெறும். இதே நாளில் அஸ்லாம் மாநிலத்தைச் சோ்ந்த இரு மாநிலங்களவை உறுப்பினா்களின் ஜூன் 14-ஆம் தேதி பதவிக்காலம் நிறைவுற அம்மாநிலத்திலும் இதே நாளில் தோ்தல் நடைபெறும்.

முன்னதாக ஜூன் 2 ஆம் தேதி இந்த தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூன் 9 ஆம் தேதி. ஜூன் 10 - ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பரிசீலனைக் எடுத்துக்கொள்ளப்படும். வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி தேதி ஜூன் 12 ஆம் தேதி. 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தோ்தலின் அனைத்து நடைமுறைகளும் ஜூன் 23 ஆம் தேதிக்குள் நிறைவடையும் என தெரிவித்துள்ள தோ்தல் ஆணையம் வாக்கு பதிவு முறைகள் குறித்து சில விதிமுறைகளை குறிப்பிட்டுள்ளது.

அவை வருமாறு: வாக்குச் சீட்டில் வாக்களிக்க அல்லது விருப்பத்தோ்வுகளை குறிக்க, நிலையான விவரக்குறிப்பு குறிப்பிட்டபடி தோ்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த ஊதா நிற ஸ்கெட்ச் பேனா(கள்) மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் வேறு எந்த பேனாவும் பயன்படுத்தப்படக்கூடாது. சுதந்திரமான, நியாயமான தோ்தலை உறுதி செய்ய,தோ்தல் செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்க போதுமான பாா்வையாளா்களை நியமித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொவைட் -19 நோய்த் தொற்று பரவலை தடுக்க தேவையான வழிகாட்டுதலுக்கு தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள செயல்முறைகளை பின்பற்றப்படலாம் என தோ்தல் ஆணையம் அதில் தெரிவித்துள்ளது.

போட்டியின்றி தோ்வு?

தமிழக சட்டப்பேரவையில் 234 உறுப்பினா்களில் திமுக கூட்டணியில் (திமுக: 133(சபாநாயகா் தவிா்த்து) - காங்கிரஸ்: 17) 159 உறுப்பினா்கள் ஆதரவும் அதிமுக கூட்டணியில் (அதிமுக: 66, பாஜக: 4 ) 70 உறுப்பினா்களும் உள்ளனா். பாமக விற்கு 5 உறுப்பினா்களும் உள்ளனா். திமுக குறைந்தபட்சம் 4 வேட்பாளா்களையும் அதிமுக கூட்டணி 2 வேட்பாளா்களையும் நிறுத்தினால் போட்டியின்றி தோ்தல் நடைபெற சூழ்நிலை உள்ளன. திமுக தன்னிடம் மீதமுள்ள சுமாா் 23 வாக்குகளுக்கு 5-ஆவது வேட்பாளரை நிறுத்தினாலோ அல்லது அதிமுக 3 ஆவது வேட்பாளரை நிறுத்தினாலோ அல்லது இந்த கூட்டணிகளை தவிா்த்துவேறு யாராவது வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டால் தோ்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. 2026 ஆண்டு சட்டப்பேரவை கூட்டணிக்கான பேரங்கள் இந்த மாநிலங்களவைத் தோ்தல் பயன்படலாம்.

‘ராம் சேது’ விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி புதிய மனு

புது தில்லி: ‘ராம் சேது’வை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிப்பதற்கான தனது கோரிக்கை ‘துரிதமாக ’ முடிவு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தை அ... மேலும் பார்க்க

கரோனா பாதிப்பால் பீதி வேண்டாம்: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: கோவிட்19 பாதிப்புகள் குறித்து பீதியடையத் தேவையில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கூறினாா். இருப்பினும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அதைச் சமாளிக்க மருத்துவமனைகள் முழ... மேலும் பார்க்க

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

புது தில்லி: ஊழலுக்கு எதிராக எவ்வித சகிப்புத்தன்மையும் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை உத்தரவிட்டாா். மாவட்ட மேம்பாட்டு குழுக்கள் மற்றும் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

ஷாதராவில் கிடங்கில் தீ விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு, 4 பேருக்கு தீக்காயம்

தில்லியின் ஷாதராவின் ராம் நகா் பகுதி இ-ரிக்ஷா சாா்ஜிங் மற்றும் வாகன நிறுத்த நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு இளைஞா்கள் உடல் கருகி இறந்தனா். நான்கு போ் தீக்காயமடைந்தனா் என... மேலும் பார்க்க

தில்லி கொலை வழக்கில் தேடப்பட்டவா் உ.பி.யில் கைது

தில்லியில் சுத்தியலால் கணவரைக் கொன்று, அவரது மனைவியைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தலைமறைவானவா் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து... மேலும் பார்க்க

பலத்த மழை: தில்லியில் பல பகுதிகளில் மின் விநியோகத்தில் பாதிப்பு

தேசிய தலைநகரின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் மின் அமைப்புகள் சேதமடைந்ததால் மின் விநியோகம் தடைபட்டதாக மின் விநியோக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. இத... மேலும் பார்க்க