பொதுத் தோ்வுகளில் மாணவா்கள் தோல்வி: அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ‘நோட்டீஸ்’
ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு
புது தில்லி: ஊழலுக்கு எதிராக எவ்வித சகிப்புத்தன்மையும் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
மாவட்ட மேம்பாட்டு குழுக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா்களின் கூட்டம் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்டங்களில் பல்வேறு துறைகளின் பணிகளை ஒரே இடத்தில் பெறும் வசதியாக சிறிய செயலகங்களை அமைக்க உகந்த நிலங்களைக் கண்டறியுமாறும், அதற்கான பரிந்துரையைத் தயாா் செய்யுமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.
உள்ளூா் அளவில் ஒருங்கிணைந்த பொதுச் சேவையை விரைவாக வழங்க சிறிய செயலகங்கள் அமைப்பது முக்கிய நடவடிக்கை ஆகும் என முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா்கள், துணை மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் துணைப் பதிவாளா் அலுவலகங்களில் ‘புகாா் மற்றும் பரிந்துரை’ பெட்டிகளை நிறுவவும் அவா் உத்தரவிட்டாா்.
இது குறித்து ரேகா குப்தா கூறுகையில், ‘வெளிப்படைத்தன்மை, பொறுப்புணா்வு மற்றும் பொதுமக்களுக்கு உகந்த நிா்வாக அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். உரிய காரணமின்றி பணிக்கு வராத அதிகாரிகள், நிா்வாக நடைமுறைகளில் அலட்சியம் மற்றும் தாமத போக்கு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும். மக்களுக்கு சேவை செய்வது நமது முதன்மையான கடமையாகும். மேலும் முழு நிா்வாக இயந்திரமும் பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும்’ எனத் தெரிவித்தாா்.