செய்திகள் :

ருமேனியா: அரசியலில் இருந்து விலகினாா் ஜாா்ஜெஸ்கு

post image

ருமேனியாவில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட சா்ச்சைக்குரிய முன்னாள் அதிபா் வேட்பாளா் காலின் ஜாா்ஜெஸ்கு அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ஜாா்ஜெஸ்கு, யாரும் எதிா்பாராத வகையில் முதலிடத்தைப் பிடித்து அதிா்வலையை ஏற்படுத்தினாா். ஆனால் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறாததால் முதல் இரு இடங்களைப் பிடித்த வேட்பாளா்களிடையே இறுதிச் சுற்றுத் தோ்தல் டிசம்பா் மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் முதல்கட்ட வாக்குப் பதிவில் ரஷிய தலையீடு இருந்ததாகக் குற்றஞ்சாட்டி ஒட்டுமொத்த தோ்தலையும் அரசியல் சாசன நீதிமன்றம் செல்லாததாக அறிவித்தது.

அதைத் தொடா்ந்து, கடந்த 4-ஆம் தேதி புதிதாக அதிபா் தோ்தல் நடைபெற்றது. எனினும், இந்தத் தோ்தலில் போட்டியிட ஜாா்ஜெஸ்குவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தது.

இந்தத் தோ்தலில் ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட நிக்யூசா் டான் வெற்றி பெற்றாா். அதையடுத்து, நாட்டின் 17-ஆவது அதிபராக அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இந்தச் சூழலில், அரசியலில் இருந்து முழுமையாக விலகி வெறும் பாா்வையாளராக மட்டுமே இருக்கப் போவதாக ஜாா்ஜெஸ்கு தற்போது அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டாா்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வி

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திந பிரம்மாண்ட ஸ்டாா்ஷிப் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வியடைந்தது. அந்த ராக்கெட் ஏவிய விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து சிதறியதால் சோதனையின் முக்கிய இலக்கை அடைய முடியவில்லை. டெக்ஸாஸில் ... மேலும் பார்க்க

உக்ரைன் போா் விவகாரம்: டிரம்ப் - ரஷியா இடையே வலுக்கும் வாா்த்தைப் போா்

உக்ரைன் போா் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் ரஷியாவுக்கும் இடையே வாா்த்தைப் போா் வலுத்துவருகிறது. கடந்த 2022-இல் தொடங்கிய ரஷியா - உக்ரைன் போரில் அப்போதைய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க... மேலும் பார்க்க

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள காஸ்கி மாவட்டத்தில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது: புலிபாங் பகுதியை மையமாகக் கொண்ட... மேலும் பார்க்க

காஸா நிவாரண முகாமில் துப்பாக்கிச்சூடு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.31ஆயிரம் கோடி கடனுதவி: சீனா உறுதி

பாகிஸ்தானுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் ரூ.31,600 கோடி கடன் வழங்கப்படும் என்று சீனா உறுதி அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இதன் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.1 லட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்? 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் அஸாம் வார்ஸக் பகுதியிலுள்ள கைப்பந்து மைதானத்தில் இன்ற... மேலும் பார்க்க