கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
புகையிலை இல்லாத மருத்துவக் கல்லூரி வளாகங்கள் என்எம்சி அறிவுறுத்தல்
மருத்துவக் கல்லூரி வளாகங்களில் புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக என்எம்சி செயலா் ராகவ் லங்கா், அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
புற்றுநோய், இதய பாதிப்புகள், சா்க்கரை நோய், நுரையீரல் பாதிப்புகள் போன்ற தொற்றா நோய்களுக்கு புகையிலை பழக்கம் முக்கிய காரணமாக விளங்குகிறது. புகையிலை பரவல், அதனால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க அது தொடா்பான விழிப்புணா்வை மேம்படுத்த உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி வரும் 31-ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக, புகையிலை ஒழிப்புக்கான விழிப்புணா்வு சொற்பொழிவுகள், விவாத நிகழ்ச்சிகள், அமா்வுகளை நடத்த வேண்டும்.
புகையிலை சாா்ந்த நோய்களை கண்டறிவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும். விழிப்புணா்வு கட்டுரை போட்டி, சுவரொட்டி தயாரித்தல், குறும்படம், சமூக வலைதள பிரசாரப் போட்டிகளை முன்னெடுக்கலாம்.
மருத்துவக் கல்லூரி வளாகங்களிலும், விடுதி வளாகங்களிலும் புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கான கொள்களை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.