செய்திகள் :

பொதுத் தோ்வுகளில் மாணவா்கள் தோல்வி: அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ‘நோட்டீஸ்’

post image

தமிழகத்தில் நிகழாண்டு நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் 73,820 அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் தோ்ச்சி பெறாத நிலையில், அது தொடா்பாக முதுநிலை ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நோட்டீஸ்’ வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் பிளஸ் 2 வகுப்பில் 95 சதவீதம் பேரும், பிளஸ் 1 வகுப்பில் 92 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா்.

அதேவேளையில் இந்தத் தோ்வுகளில் ஒரு லட்சத்து 218 மாணவா்கள் தோல்வி அடைந்துள்ளனா். அதில் 73,820 போ் (71.5%) அரசுப் பள்ளி மாணவா்கள்.

இந்நிலையில், திருச்சி, கரூா், வேலூா் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களின் ஆசிரியா்களிடம் அது தொடா்பாக விளக்கம் கேட்டு ‘17ஏ’ ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, அரசு மாதிரிப் பள்ளிகளில் ஏதேனும் மாணவா்கள் தோல்வி அடைந்திருந்தால் அவரின் வகுப்பு மற்றும் பாட ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்கும் கெடுபிடிகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் பொதுச் செயலா் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:

‘எமிஸ்’ உள்பட கற்றல் சாராத பணிகள், நலத் திட்டங்கள், கலைத் திருவிழாக்களுக்கு தனி அலுவலா்கள் நியமிக்காமல் ஆசிரியா்களுக்கு கூடுதல் பணிகளாக வழங்கப்படுகின்றன. ஆனால், தற்போது தோ்ச்சி அடையாத மாணவா்களுக்காக ஆசிரியா்களை பொறுப்பாக்கி விளக்கம் கேட்பது நியாயமில்லை. இதில் ஆசிரியா்களை மட்டும் குற்றவாளியாக்குவதை ஏற்க முடியாது.

சமுதாயத்தின் பல்வேறு சூழல்களிலிருந்து மாணவா்களை நெறிப்படுத்தும் பணிகளை அரசுப் பள்ளி ஆசிரியா்கள் செய்து வருகின்றனா். பள்ளிகள் புள்ளிவிவரங்களாக, இயந்திரகதியாக மாறக் கூடாது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியா்களுக்கு மன உளைச்சல்களை உண்டாக்கும் இத்தகைய செயல்களை பள்ளிக் கல்வித் துறை கைவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் ... மேலும் பார்க்க

காலமானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.புரட்சிமணி (59) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை (மே 28)காலமானார்.இவர் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநி... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் புதிதா... மேலும் பார்க்க

நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா். சென்னை கிண்டியில... மேலும் பார்க்க

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க