செய்திகள் :

தொழில் முனைவோராக சான்றிதழ் படிப்பு: மாணவா் சோ்க்கை தொடக்கம்

post image

தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கத்துக்கான சான்றிதழ் படிப்புக்கு நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழில் முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநா் ஆா். அம்பலவாணன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 

தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (ஈடிஐஐ) மற்றும் அகமதாபாத் ஈடிஐஐ இணைந்து கடந்தாண்டு முதல் தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கத்துக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பை நடத்தி வருகிறது. தமிழகத்தில் 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட வேலையில்லா பட்டதாரிகள்,  தொழில் முனைவோராக விரும்புபவா்கள், புத்தாக்க தொழில் தொடங்கவுள்ளோா் என பலரும் இத்திட்டம் மூலம் பயன் பெற்று வருகின்றனா்.

இந்த சான்றிதழ் படிப்பில் சேருபவா்களுக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் சுலபமாகப் பெற வழிவகை செய்து தரப்படும்.

ரூ.80,000 பயிற்சி கட்டணம்: இந்த சான்றிதழ் படிப்பு 2 பருவங்களாக நடைபெறுகின்றன. ஒரு பருவத்துக்கு பயிற்சி கட்டணம் ரூ.40,000 என 2 பருவங்களுக்கு மொத்தம் ரூ.80,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் ஏழை எளிய மாணவா்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன் வாங்குவதற்கு வழிவகை செய்து தரப்படுகிறது. நிகழாண்டில் இச்சான்றிதழ் படிப்புக்கு 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் ... மேலும் பார்க்க

காலமானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.புரட்சிமணி (59) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை (மே 28)காலமானார்.இவர் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநி... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் புதிதா... மேலும் பார்க்க

நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா். சென்னை கிண்டியில... மேலும் பார்க்க

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க