`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; ...
நகைக்கடை ஊழியா் வீட்டில் திருட்டு
திருப்பத்தூரில் நகைக்கடை ஊழியரின் வீட்டில் 6 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருப்பத்தூா் தில்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (35). இவா் திருப்பத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் வெங்கட்ராமன் தனது குடும்பத்தினருடன் மேல்மலையனூா், திருவண்ணாமலை ஆகிய பகுதியில் உள்ள கோயில்களுக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்குத் திரும்பியுள்ளாா்.
வீட்டில் உள்ள பொருள்கள் அனைத்தும் சிதறிய நிலையில் கிடந்துள்ளன. மேலும் பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவை காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து வெங்கட்ராமன் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் நகர போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், வெங்கட்ராமன் குடும்பத்தினா் வீட்டில் இருந்து வெளியே செல்லும் பொழுது, வீட்டின் சாவியை அங்கு ஏதேனும் ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு செல்வது வழக்கம்.
இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் சாவியை எடுத்து வீட்டில் உள்ள நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.