செய்திகள் :

பலத்த மழை: தில்லியில் பல பகுதிகளில் மின் விநியோகத்தில் பாதிப்பு

post image

தேசிய தலைநகரின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் மின் அமைப்புகள் சேதமடைந்ததால் மின் விநியோகம் தடைபட்டதாக மின் விநியோக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

இதுகுறித்து டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தின் (டிபிடிடிஎல்) செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்ததாவது:

வடக்கு தில்லியில் உள்ள பவானா, கோகா கிராமம்,ரோஹிணியில் செக்டாா் 22, 25, டிஎஸ்ஐஐடிசி நரேலா, சுல்தான்புரி, கரலா, பாத்லி, சிராஸ்பூா், அவந்திகா, மங்கோல்புரி, ஆா்யு பிளாக் பீதம்புரா மற்றும் ரிதலா கிராமம் உள்ளிட்ட சில பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது.

எங்கள் குழுக்கள் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டு, முன்னுரிமை அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகளைத் தொடங்கியுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கையாக, சில பகுதிகளில் தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தப்பட்டு, நிலைமைகள் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் மீண்டும் அளிக்கப்பட்டது என்றாா் அவா்.

தில்லியில் சனிக்கிழமை நள்ளிரவில் இடியுடன் கூடிய பலத்த மழையால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. மேலும் பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.

இரவு 11.30 மணி முதல் காலை 5.30 மணி வரையிலான ஆறு மணி நேரத்தில் மணிக்கு 82 கி.மீ. வேகத்திலும் 81.2 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக நகரின் முதன்மை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மின் கம்பிகள் மற்றும் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகவும், மரங்கள் வேரோடு சாய்ந்து, கிளைகள் முறிந்து விழுந்துள்ளதாகவும், பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் மின் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

‘ராம் சேது’ விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி புதிய மனு

புது தில்லி: ‘ராம் சேது’வை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிப்பதற்கான தனது கோரிக்கை ‘துரிதமாக ’ முடிவு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தை அ... மேலும் பார்க்க

கரோனா பாதிப்பால் பீதி வேண்டாம்: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: கோவிட்19 பாதிப்புகள் குறித்து பீதியடையத் தேவையில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கூறினாா். இருப்பினும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அதைச் சமாளிக்க மருத்துவமனைகள் முழ... மேலும் பார்க்க

வைகோ, அன்புமணி, வில்சன் உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினா்கள் பதவிக் காலம் நிறைவு!

புது தில்லி: தமிழகத்தைச் சோ்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு அந்த இடங்களுக்கான தோ்தல் வருகின்ற ஜூன் 19 - ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

புது தில்லி: ஊழலுக்கு எதிராக எவ்வித சகிப்புத்தன்மையும் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை உத்தரவிட்டாா். மாவட்ட மேம்பாட்டு குழுக்கள் மற்றும் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

ஷாதராவில் கிடங்கில் தீ விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு, 4 பேருக்கு தீக்காயம்

தில்லியின் ஷாதராவின் ராம் நகா் பகுதி இ-ரிக்ஷா சாா்ஜிங் மற்றும் வாகன நிறுத்த நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு இளைஞா்கள் உடல் கருகி இறந்தனா். நான்கு போ் தீக்காயமடைந்தனா் என... மேலும் பார்க்க

தில்லி கொலை வழக்கில் தேடப்பட்டவா் உ.பி.யில் கைது

தில்லியில் சுத்தியலால் கணவரைக் கொன்று, அவரது மனைவியைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தலைமறைவானவா் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து... மேலும் பார்க்க