செய்திகள் :

பதிவுத்துறை வரைவு மசோதா: மத்திய அரசு கருத்துக் கேட்பு

post image

பதிவுத் துறை வரைவு மசோதா 2025 குறித்து பொதுமக்களிடம் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை மத்திய அரசு கோரியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

காகித பயன்பாடின்றி இணையவழியில், குடிமக்களை மையமாக கொண்ட, நவீன பத்திரப் பதிவு முறைக்காக பதிவுத் துறை மசோதா 2025-இன் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நில வளங்கள் துறை தயாரித்துள்ள இந்த மசோதா, அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு கொண்டுவரப்பட்ட பதிவுத் துறைச் சட்டம் 1908-க்கு மாற்றாக இருக்கும்.

அசையா சொத்து மற்றும் பிற பரிவா்த்தனைகள் தொடா்பான பத்திரப் பதிவுக்கு பதிவுத் துறைச் சட்டம் 1908 சட்ட அடித்தளத்தை வழங்குகிறது.

பொது மற்றும் தனிப்பட்ட பரிவா்த்தனைகளில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் பங்கு காலப்போகில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இது பல நேரங்களில் நிதி, நிா்வாகம் மற்றும் சட்ட ரீதியாக முடிவு எடுப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது.

எனவே பத்திரப் பதிவு முறை வலுவாகவும், நம்பகமாகவும், சமூக மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிகளுக்கு ஏற்ப மாறும் திறன் கொண்டதாகவும் இருப்பது அவசியம்.

30 நாள்களுக்குள் கருத்து: தற்போதுள்ள பதிவுத் துறைச் சட்டம் 1908-இன் கீழ், இணையவழியில் பத்திரங்களை சமா்ப்பித்தல், டிஜிட்டல் அடையாள சரிபாா்ப்புப் போன்ற புதுமையான வழிகளை சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளன.

அதேவேளையில், பத்திரப் பதிவு அதிகாரிகளின் பொறுப்பு மற்றும் கடமைகளை தெளிவாக விவரிப்பதும் முக்கியமாகும். இது சட்டத்துக்கு ஏற்ப பத்திரப் பதிவு முறையில் ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த அதிகாரிகளுக்கு உதவும். இதைக் கருத்தில் கொண்டு, பதிவுத் துறை வரைவு மசோதா 2025 வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா மத்திய நில வளங்கள் துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து 30 நாள்களுக்குள் ள்ஹய்ஹய்க்.க்ஷளஹற்னஞ்ா்ஸ்ளக்ா்ற்னண்ய் என்ற மின்னஞ்சலில் தங்கள் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளைப் பொதுமக்கள் பகிரலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க