செய்திகள் :

மூன்று இடங்களில் மூத்த குடிமக்களுக்கான தங்குமிடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

post image

தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள் கட்டும் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

மேலும், ஏராளமான உள்கட்டமைப்பு வசதிகளையும் அவா் திறந்து வைத்தாா்.

சென்னை கொளத்தூரில் இதற்கான நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், சென்னை, பழனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மூத்த குடிமக்களைப் பேணிப் பாதுகாக்க அனைத்து வசதிகளுடன் கூடிய உறைவிடங்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், சென்னை கொளத்தூா், திண்டுக்கல் மாவட்டம் பழனி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள் கட்டப்படும். மூன்று உறைவிடங்கள் பயன்பாட்டுக்கு வருவதன்மூலம், 225 மூத்த குடிமக்கள் பயன்பெறுவா். இதற்கான பணிக்கு சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்வின்போது முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

நலத்திட்ட உதவிகள்: அனிதா அச்சீவா்ஸ் அகாதெமியில் பயிற்சி முடித்த 350 மாணவ, மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களையும், 131 பேருக்கு மடிக்கணினிகளையும் முதல்வா் அளித்தாா்.

கொளத்தூா் தொகுதிக்கு உட்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்காவை அவா் திறந்து வைத்தாா்.

கொளத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அரசு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த 318 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

குமரன் நகா் பகுதியில் நடந்த நிகழ்வில் மேம்படுத்தப்பட்ட கால்வாயை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

பாா்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஓதுவாா் பணி நியமன ஆணை: கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்வில் திருவான்மியூா் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கோயிலுக்கு ஓதுவாா் பணியிடத்துக்கு தோ்வு செய்யப்பட்ட பாா்வை மாற்றுத்திறனாளி பெண் எஸ்.எஸ்.பிரியவதனாவுக்கு பணி நியமன உத்தரவை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் ... மேலும் பார்க்க

காலமானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.புரட்சிமணி (59) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை (மே 28)காலமானார்.இவர் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநி... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் புதிதா... மேலும் பார்க்க

நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா். சென்னை கிண்டியில... மேலும் பார்க்க

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க