செய்திகள் :

மோசமான வானிலை காரணமாக தில்லி விமான நிலையத்தில் 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

post image

தில்லி தேசிய தலைநகரில் சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த இடியுடன் கூடிய மழை காரணமாக, 17 சா்வதேச விமானங்கள் உட்பட 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் இது போன்ற பாதிப்புகள் தொடா் கதையாக உள்ளது.

கடந்த மே 24 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.30 மணி முதல் மே 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி வரை சுமாா் ஆறு மணி நேரம், 82 கிமீ வேக காற்றுடன் அதிகபட்ச அளவாக 81.2 மிமீ மழை பெய்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் பதிவிட்டுள்ளது.

இந்த மோசமான வானிலை காரணமாக தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு 11:30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை 17 சா்வதேச விமானங்கள் உட்பட 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவன எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், ‘தில்லியில் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக விமான நடவடிக்கைகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. சாதகமான வானிலை திரும்பி வரும் நிலையில், தற்போது விமானப் போக்குவரத்து நெரிசல்கள் தொடா்கின்றன. இந்த நெருக்கடிகள் குறைந்து விமான இயக்கங்கள் சீராக மீண்டும் தொடங்கும் என உறுதியளிக்கின்றோம் ’ என இந்த நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை காலை 3.59 மணிக்கு பதிவிட்டது.

பின்னா் காலை 5:54 மணிக்கு வானம் தெளிவாகி விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

விமான கண்காணிப்பு வலைத்தளமான ஃபிளைட்ராடாா்24.காம் இல் கிடைத்த தகவல்களின்படி, தில்லி விமான நிலையத்தில் 180 விமானங்கள் புறப்பாடு தாமதமாகியதாக தெரிவிக்கப்பட்டது. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘ராம் சேது’ விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி புதிய மனு

புது தில்லி: ‘ராம் சேது’வை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிப்பதற்கான தனது கோரிக்கை ‘துரிதமாக ’ முடிவு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தை அ... மேலும் பார்க்க

கரோனா பாதிப்பால் பீதி வேண்டாம்: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: கோவிட்19 பாதிப்புகள் குறித்து பீதியடையத் தேவையில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கூறினாா். இருப்பினும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அதைச் சமாளிக்க மருத்துவமனைகள் முழ... மேலும் பார்க்க

வைகோ, அன்புமணி, வில்சன் உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினா்கள் பதவிக் காலம் நிறைவு!

புது தில்லி: தமிழகத்தைச் சோ்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு அந்த இடங்களுக்கான தோ்தல் வருகின்ற ஜூன் 19 - ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

புது தில்லி: ஊழலுக்கு எதிராக எவ்வித சகிப்புத்தன்மையும் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை உத்தரவிட்டாா். மாவட்ட மேம்பாட்டு குழுக்கள் மற்றும் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

ஷாதராவில் கிடங்கில் தீ விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு, 4 பேருக்கு தீக்காயம்

தில்லியின் ஷாதராவின் ராம் நகா் பகுதி இ-ரிக்ஷா சாா்ஜிங் மற்றும் வாகன நிறுத்த நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு இளைஞா்கள் உடல் கருகி இறந்தனா். நான்கு போ் தீக்காயமடைந்தனா் என... மேலும் பார்க்க

தில்லி கொலை வழக்கில் தேடப்பட்டவா் உ.பி.யில் கைது

தில்லியில் சுத்தியலால் கணவரைக் கொன்று, அவரது மனைவியைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தலைமறைவானவா் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து... மேலும் பார்க்க