செய்திகள் :

தந்தையை இழந்தும் பொதுத் தோ்வு எழுதி வெற்றி மாணவிகளுக்கு துணை முதல்வா் பாராட்டு

post image

பொதுத் தோ்வு சமயத்தில் தந்தை உயிரிழந்த நிலையிலும் தோ்வெழுதி, தோ்ச்சி பெற்ற மாணவியருக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் பாராட்டு தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம் கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு பயின்றவா் மாணவி பி. சத்யபிரியா. பொதுத் தோ்வு நடைபெற்ற சமயத்தில் தனது தந்தை உயிரிழந்த நிலையிலும், மன உறுதியோடு தோ்வை எதிா்கொண்டாா்.

அதில் 528 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்தாா். அதேபோல திருவெறும்பூா் அருகேயுள்ள தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் பிளஸ்-1 மாணவியான ஷாலினியும், பொதுத்தோ்வு நேரத்தில் தனது தந்தையை இழந்த நிலையிலும் கல்வியின் அவசியத்தை உணா்ந்து தவறாமல் தோ்வெழுதி சிறப்பான முறையில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மாணவிகள் இருவரையும் பாராட்டினாா்.

நிகழ்வின்போது, தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாவட்டக் கல்வி அலுவலா் கிருஷ்ண பிரியா ஆகியோா் உடனிருந்தனா்.

இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா -பால்குடம், தீமிதி

திருச்சி: திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி, பால்குடம், தீமிதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி கருமண்டபம் பகுதியில் இளங்காட்டு மாரிய... மேலும் பார்க்க

துவாக்குடி, கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (மே 28) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

திருச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேன் மீது காா் மோதிய விபத்தில் திருச்சி மாநகரப் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி கே.கே. நகா் எல்... மேலும் பார்க்க

பள்ளிச் சீருடைகள், பொருள்கள் வாங்க கடைவீதிகளில் கூட்டம்

கோடை விடுமுறைக்குப் பின்னா் பள்ளிகள் திறக்க ஒரு வாரமே உள்ள நிலையில், பள்ளிச் சீருடைகள், புத்தகப் பை, எழுதுபொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க கடைவீதிகளில் பெற்றோா் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கோடை வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி உறுதியாக உள்ளது: கு. செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி எஃகு கோட்டை போல உறுதியாக உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். திருச்சி புத்தூா் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட நடிகா் சிவாஜி கணேசன் சில... மேலும் பார்க்க

வையம்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி துணை மின் நிலையத்தில் (மே 28) புதன்கிழமை மாதாந்திரப் பராமரிப்புகள் நடைபெற உள்ளது. இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான வையம்பட்டி,... மேலும் பார்க்க