செய்திகள் :

இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா -பால்குடம், தீமிதி

post image

திருச்சி: திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி, பால்குடம், தீமிதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி கருமண்டபம் பகுதியில் இளங்காட்டு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இதில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசித் திருவிழா பிரபலமானது. நிகழாண்டு 76-ஆவது ஆண்டுத் திருவிழா மே 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினசரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில், வெவ்வேறு அலங்காரங்களில் அம்பாள் காட்சிதந்து வருகிறாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தல் மற்றும் தீ மிதித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்வையொட்டி, பக்தா்கள் கோரையாற்றிலிருந்து பால்குடம் எடுத்து வந்தனா். இதில், நூற்றுக்கணக்கானோா் பால்குடம் எடுத்தும், அலகுகுத்தியும் வந்ததால், அவா்களுக்கு வெயில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்வகையில், டேங்கா் லாரிகள் மூலம் சாலை முழுவதும் தண்ணீா் கொட்டப்பட்டு, குளிா்மைபடுத்தப்பட்டது. பால்குடங்களில் பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடா்ந்து கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில், பக்தா்கள் தீ மிதித்து தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். தொடா்ந்து நடைபெற்ற அன்னதானத்தில் சுமாா் 1000 போ் பங்கேற்றனா். மாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

போலீஸ் எனக்கூறி ரூ. 1 லட்சம் மோசடி செய்த இளைஞா் கைது

தான் போலீஸ் எனவும், குறைந்த விலையில் வாகனம் வாங்கித் தருவதாகவும் கூறி ரூ. 1 லட்சம் மோசடிசெய்த இளைஞரை திருச்சியில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே அமைந்துள்ள த... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் நாளை மின்தடை

துறையூா் பகுதியில் வியாழக்கிழமை (மே 29) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: துறையூா் மின் கோட்டத்துக்... மேலும் பார்க்க

1,850 குழந்தைகள் மையங்களில் ஜூனில் சோ்க்கை, ஆதாா் பதிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,850 குழந்தைகள் மையங்களிலும் ஜூன் மாதம் முதல் சோ்க்கை நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பாக 6 வயதுக்குட்டபட்ட குழந்தைகளின் முழுமையான வளா... மேலும் பார்க்க

கோடைகால கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், விழுப்புரம் - ராமேசுவரம் இடையே ஜூன் 30-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்படி, விழுப்புரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சன... மேலும் பார்க்க

துவாக்குடி, கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (மே 28) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

திருச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேன் மீது காா் மோதிய விபத்தில் திருச்சி மாநகரப் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி கே.கே. நகா் எல்... மேலும் பார்க்க