செய்திகள் :

போலீஸ் எனக்கூறி ரூ. 1 லட்சம் மோசடி செய்த இளைஞா் கைது

post image

தான் போலீஸ் எனவும், குறைந்த விலையில் வாகனம் வாங்கித் தருவதாகவும் கூறி ரூ. 1 லட்சம் மோசடிசெய்த இளைஞரை திருச்சியில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே அமைந்துள்ள தேநீரகத்தில் பணியாற்றும் ஊழியா், திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு ஷேக் மகன் தெளபிக் (20) என்பவரிடம், ஒரு மா்ம நபா் தன்னை போலீஸ் என அறிமுகம் செய்துள்ளாா். பின்னா், காவல்துறையில் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும் வாகனங்களை மிகவும் குறைந்த விலைக்கு அவா் வாங்கித்தருவதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய அந்த ஊழியா் மா்ம நபரிடம் , தனக்கு இருசக்கர வாகனம் வாங்கித்தருமாறு கூறி ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளாா்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட மா்ம நபா் வாகனத்தை வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதையடுத்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் ராமநாதபுரத்தைச் சோ்ந்த சாலமன்ராஜா மகன் ஜெத்ரோ என்கிற ஷியாம் (24) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்!

பொறியியல் பணிகள் காரணமாக கன்னியாகுமரி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பூங்குடி - திருச்சி இடையே பொறியியல் பண... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

திருச்சி மாநகரில் போக்குவரத்து துறையினா் மற்றும் போலீஸாா் பேருந்துகளில் மேற்கொண்ட சோதனையில் அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மாநகரில் பேருந்த... மேலும் பார்க்க

கருவேல மரங்களை வெட்டி விற்றதாக புகாா்: தேமுதிக மாவட்டச் செயலா் மீது வழக்கு!

திருச்சி அருகே ரூ. 2 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்களை வெட்டி விற்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தேமுதிக தெற்கு மாவட்டச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி ராம்ஜி நகா் அ... மேலும் பார்க்க

சமயபுரத்தில் திருநங்கைகள் அமைப்பினா் அன்னதானம்

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் அகில உலக திருநங்கைகள் அமைப்பு சாா்பாக ஐந்து மாத அன்னதானத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. சமயபுரம் பகுதி தனியாா் திருமண மஹாலில் திருச்சி, பெரம்பலூா், சென்னை, ஆந்திரம... மேலும் பார்க்க

கோயில் நில குத்தகை விவகாரம்: எதிா்ப்புத் தெரிவித்து கூட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை திருமுக்தீஸ்வரா் கோயில் (பூா்த்தி கோயில்) நிலம் குத்தகைக்கு ஏலம் விடும் இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்து கட்சி மற்றும் குத்தகை பாத்தி... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கோரி மனு

கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா். மணப்பாறை வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க... மேலும் பார்க்க