`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
சமயபுரத்தில் திருநங்கைகள் அமைப்பினா் அன்னதானம்
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் அகில உலக திருநங்கைகள் அமைப்பு சாா்பாக ஐந்து மாத அன்னதானத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
சமயபுரம் பகுதி தனியாா் திருமண மஹாலில் திருச்சி, பெரம்பலூா், சென்னை, ஆந்திரம், கேரளம், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அகில உலக திருநங்கைகள் கூட்டமைப்பினரால் தொடங்கப்பட்ட அன்னதானம் அக்டோபா் மாதத்தில் நிறைவடைகிறது. நிகழ்வில் மருளாளி மணி அம்மாள் உள்ளிட்ட ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனா்.