செய்திகள் :

கோயில் நில குத்தகை விவகாரம்: எதிா்ப்புத் தெரிவித்து கூட்டம்

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறை திருமுக்தீஸ்வரா் கோயில் (பூா்த்தி கோயில்) நிலம் குத்தகைக்கு ஏலம் விடும் இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்து கட்சி மற்றும் குத்தகை பாத்தியமுள்ள ஆயக்கட்டு விவசாயிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சீகம்பட்டி கிராமம், பொன்முச்சந்தி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலுக்குச் சொந்தமாக சுமாா் 246 ஏக்கா் நிலம் உள்ளது. இதில் அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 150-க்கும் மேற்பட்ட, பல தலைமுறைகளாக குத்தகை பாத்தியம் உள்ளவா்கள் வேளாண் தொழில் செய்கின்றனா்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த சில நாட்களுக்கு முன் நில குத்தகைதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் வசமே நிலம் உள்ளது எனவும், துறை ஆணையா் உத்தரவில் குத்தகைக்கு விடப்படும் நிலங்கள் அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒருவரிடம் இருக்க கூடாது எனவும், குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை மீண்டும் பொது ஏலத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் உள்ளதாம்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்து கட்சி நிா்வாகிகள் மற்றும் குத்தகை பாத்தியமுள்ள ஆயக்கட்டு விவசாயிகள் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் திமுக மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜன், ஒன்றியச் செயலா் ராமசாமி, அதிமுக ஒன்றியச் செயலா் அன்பரசன், மதிமுக ஒன்றியச் செயலா் துரைராஜ், இந்திய கம்யூ. ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிதம்பரம், விசிக மாவட்டச் செயலா் சக்தி (எ)ஆற்றலரசு, வழக்குரைஞா் தியாகராஜன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொடா்ந்து குத்தகை தொகை செலுத்தி வரும் நிலையில், விவசாயிகளை ஆக்கிரமிப்புகாரா்களாக கருதி நிலத்தை ஏலம் விடும் நடவடிக்கையைக் கண்டிப்பது, அந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் வலியுறுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க