மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்
திருச்சி மாநகரில் போக்குவரத்து துறையினா் மற்றும் போலீஸாா் பேருந்துகளில் மேற்கொண்ட சோதனையில் அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.
திருச்சி மாநகரில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்களை (ஏா் ஹாரன்) பொருத்தி, ஒலி மாசு ஏற்படும் வகையில் சப்தம் எழுப்புவது குறித்த புகாா்கள் வந்தன. அதனடிப்படையில், திருச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செந்தில்நாதன், மாநகர காவல்துறை, கண்டோன்மென்ட் காவல் துணை ஆணையா் முகமது ரபீக் ஆகியோா் தலைமையில், கண்டோன்மென்ட் போக்குவரத்து காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் மற்றும் போலீஸாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோா் திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பொருத்தியமைக்காக 2 அரசுப் பேருந்துகள், 13 தனியாா் பேருந்துகள் என மொத்தம் 15 பேருந்துகளுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் காற்று ஒலிப்பான்களும் அழிக்கப்பட்டன.