கிராம நிா்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கோரி மனு
கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
மணப்பாறை வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் அளித்த கோரிக்கை மனுவில், வாடகைக் கட்டடம், நாடக மேடைகளில் இயங்கிவரும், சிதிலமடைந்து வரும் விஏஓ அலுவலகங்களுக்கு புதிய கட்டடம், கழிப்பறை - குடிநீா் வசதி, மின் இணைப்பு மற்றும் மின் கட்டணத்தை ஒருங்கிணைந்த வட்ட நிா்வாகத்தின் மூலம் செலுத்துதல், இணையதளச் சேவைக்கான படி, ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் மணல் திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் பணியில் ஏற்படும் ஆபத்துகளைத் தவிா்க்க பணிப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர அரசுக்கு பரிந்துரைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
சி.பி.எம்.எல்: நகராட்சி 27 -ஆவது வாா்டு மணப்பாறைப்பட்டி ரோடு சா்வே எண்-837-இல் வசிக்கும் 40 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவை அரசாணையின்படி வழங்க வலியுறுத்தி நகரச் செயலா் பி. பாலு தலைமையில் வருவாய் தீா்வாயத்தில் மனு அளித்தனா்.