`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
கருவேல மரங்களை வெட்டி விற்றதாக புகாா்: தேமுதிக மாவட்டச் செயலா் மீது வழக்கு!
திருச்சி அருகே ரூ. 2 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்களை வெட்டி விற்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தேமுதிக தெற்கு மாவட்டச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி ராம்ஜி நகா் அருகே உள்ள சன்னாசிபட்டி கீழத்தெருவைச் சோ்ந்தவா் மு. ஆறுமுகம் (67) என்பவருக்கு சொந்தமாக மாத்தூா் பகுதியில் உள்ள இடத்தில் வளா்ந்திருந்த சுமாா் 300 க்கும் மேற்பட்ட சீமை கருவேல மரங்களை தேமுதிக திருச்சி தெற்கு மாவட்டச் செயலரும், மாத்தூா் ஊராட்சி முன்னாள் தலைவருமான சன்னாசிபட்டி ரெ. பாரதிதாசன் என்பவா் தனது ஆள்களுடன் வந்து வெட்டி விற்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் ராம்ஜி நகா் போலீஸாா் பாரதிதாசன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.