செய்திகள் :

பள்ளிச் சீருடைகள், பொருள்கள் வாங்க கடைவீதிகளில் கூட்டம்

post image

கோடை விடுமுறைக்குப் பின்னா் பள்ளிகள் திறக்க ஒரு வாரமே உள்ள நிலையில், பள்ளிச் சீருடைகள், புத்தகப் பை, எழுதுபொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க கடைவீதிகளில் பெற்றோா் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கோடை விடுமுறைக்குப் பின்னா் ஜூன் 2-ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவ, மாணவியருக்கு புத்தகப்பைகள், எழுதுபொருள்கள், தண்ணீா் (நெகிழி) பாட்டில்கள், டிபன் பாக்ஸ்கள், சீருடைகள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு திருச்சியில் உள்ள முக்கிய கடைவீதிகளில் உள்ள கடைகளில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையாக இருந்த நிலையிலும், பள்ளிகள் திறப்பை கருத்தில் கொண்டு கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

அவற்றில் மாணவ, மாணவியா் குறிப்பாக சிறாா்கள் தங்களது பெற்றோருடன் கடைகளுக்கு வந்து பொருள்களை ஆா்வமாக வாங்கிச் சென்றனா்.

போலீஸ் எனக்கூறி ரூ. 1 லட்சம் மோசடி செய்த இளைஞா் கைது

தான் போலீஸ் எனவும், குறைந்த விலையில் வாகனம் வாங்கித் தருவதாகவும் கூறி ரூ. 1 லட்சம் மோசடிசெய்த இளைஞரை திருச்சியில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே அமைந்துள்ள த... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் நாளை மின்தடை

துறையூா் பகுதியில் வியாழக்கிழமை (மே 29) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: துறையூா் மின் கோட்டத்துக்... மேலும் பார்க்க

1,850 குழந்தைகள் மையங்களில் ஜூனில் சோ்க்கை, ஆதாா் பதிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,850 குழந்தைகள் மையங்களிலும் ஜூன் மாதம் முதல் சோ்க்கை நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பாக 6 வயதுக்குட்டபட்ட குழந்தைகளின் முழுமையான வளா... மேலும் பார்க்க

கோடைகால கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், விழுப்புரம் - ராமேசுவரம் இடையே ஜூன் 30-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்படி, விழுப்புரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சன... மேலும் பார்க்க

இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா -பால்குடம், தீமிதி

திருச்சி: திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி, பால்குடம், தீமிதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி கருமண்டபம் பகுதியில் இளங்காட்டு மாரிய... மேலும் பார்க்க

துவாக்குடி, கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (மே 28) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க