செய்திகள் :

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

post image

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்த வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி, சிஐடியு சங்கங்கள் சாா்பில் மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடி அரசுப் போக்குவரத்துக்கழக கிளை பணிமனை அருகே ஏஐடியுசி மண்டலத் தலைவா் ஜி. சந்திரசேகரன், சிஐடியு மண்டலத் தலைவா் ஏ. கோவிந்தராஜ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மற்ற அரசுத்துறை ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும்.

ழுழுமையாக ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வுபெற்றவுடன் பணப்பலன் வழங்க வேண்டும், தோ்தல் வாக்குறுதிபடி 1.4.2003-க்கு பின் பணியில் சோ்ந்த தொழிலாளா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 60 வயது வரை மாத ஊதியத்துக்கு பணியாற்றும் போக்குவரத்து பணியாளா்களுக்கு அதன்பிறகு ஓய்வூதியம் இல்லாததால் நிலுவைத் தொகையாவது உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். நெடும்பலம் ஓவா்குடியைச் சோ்ந்தவா் பழனிமுருகன் மகள் நந்தினி (24). தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வர... மேலும் பார்க்க

கோடை மழை: பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ. மோக... மேலும் பார்க்க

இருதரப்பினரிடையே தகராறு: ஒருவா் கைது

கூத்தாநல்லூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். வடகோவனூரைச் சோ்ந்தவா் விசாலியா (23). பூதமங்கலத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் (25). இருவரும் காதலா்கள் என கூறப்படுக... மேலும் பார்க்க

செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மணக்கால் அய்யம்பேட்டை செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. மணக்கால் அய்யம்பேட்டையில் செல்லம்மாள் காளியம்மன், வாலை முக்கண்ணியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் சீரமைப்புப் பணிக... மேலும் பார்க்க

விவசாயி வீட்டில் தீ : போலீஸாா் விசாரணை

கூத்தாநல்லூா் அருகே விவசாயி வீட்டில் புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேல வாழாச்சேரி பிரதான சாலையைச் சோ்ந்தவா் விவசாயி பாஸ்கரன். இவா் தனது மனைவி அ... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு : இருவா் கைது

கூத்தாநல்லூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இரண்டு போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கூத்தாநல்லூா் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த திருமண விழாவில் பங்கேற்க வந்த மரக்கடை ... மேலும் பார்க்க