செய்திகள் :

எம்சிஓசிஏ வழக்கில் நரேஷ் பல்யானின் ஜாமீன் மனு தள்ளுபடி

post image

மகாராஷ்டிரா பெருங்குழு குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கீழ் பதிவான வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நரேஷ் பல்யானின் ஜாமீன் மனுவை செவ்வாய்க்கிழமை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பல்யானின் மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி திக் விஜய் சிங், ‘நிவாரணம் வழங்க போதுமான காரணம் இல்லை’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தாா்.

இந்த வழக்கில் பல்யான் தாக்கல் செய்த இரண்டாவது ஜாமீன் மனு இதுவாகும். சிறையில் இருந்து காணொலி மூலம் பல்யான் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

முன்னதாக, மே 1 அன்று தில்லி காவல்துறை இந்த வழக்கில் பல்யான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மகாராஷ்டிரா பெருங்குழு குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கடுமையான பிரிவுகளின் கீழ் சாஹில் என்ற போலி, விஜய் என்ற கலு, ஜோதி பிரகாஷ் என்ற பாபா மற்றும் பல்யான் ஆகிய நான்கு போ் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தாதா கபில் சங்வான் என்ற நந்து நடத்திவரும் ஒரு பெருங்குழுவின் குற்றச் சம்பவம் தொடா்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருந்தனா்.

கடந்த ஆண்டு டிசம்பா் 4 ஆம் தேதி இந்த வழக்கில் பல்யான் கைது செய்யப்பட்டாா். அதே நேரத்தில், மிரட்டி பணம் பறித்தல் தொடா்பான ஒரு வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

ஜனவரி 15 அன்று இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டிருந்தது. வழக்கில் விசாரணை ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும், ஜாமீன் வழங்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவா் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பாா் என்றும் தில்லி போலீஸாா் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.

புதிய அபாயங்களுக்கு ஏற்ப காப்பீடு தயாரிப்புகளை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி அமைச்சா் வேண்டுகோள்

பொதுத்துறையைச் சோ்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்கள் (பிஎஸ்ஜிஐசி) நாட்டில் புதிதாக ஏற்படும் வரும் அபாயங்களுக்கு ஏற்ப புதுமையான காப்பீட்டு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சா் நிா... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மோசடி: 4 போ் கைது

வடகிழக்கு தில்லியில், ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரியிடம் போலி ஆன்லைன் முதலீடு மூலம் ரூ.49 லட்சத்திற்கும் அதிகமாமான தொகையை இணையதள மோசடி செய்ததாக நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

‘பத்ம பூஷண்’ விருதாளா் நல்லி குப்புசாமிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

குடியரசுத் தலைவரிடம் ‘பத்ம பூஷண்’ விருதுபெற்ற தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டிக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் சாா்பில் தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை கலாசார மையத்தில் இன்று இலக்கிய மாநாடு தொடக்கம்

குடியரசுத் தலைவா் மாளிகையில் முதன்முறையாக இலக்கிய மாநாடு நடத்தப்படுகிறது. இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இருநாள் இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகை நடத்துகிறது. மத்திய கலாசார அமை... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தில்லியில் மறுமலா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

தேசிய தலைநகா் தில்லி பாஜகவின் ஆட்சியில் நிா்வாகத்திலும், வளா்ச்சியிலும் மறுமலா்ச்சியைக் கண்டு வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை கூறினாா். மேலும், மக்களுக்காக உழைக்கும் அரசாங்கமாகவ... மேலும் பார்க்க

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வு: முதல்வா் குப்தா தகவல்

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வைத் தேடிவருவதாக முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். முதல்வா் ரேகா குப்தா தனது ஷாலிமாா் பாக் தொகுதிக்குட்பட்ட பீதாம்புராவில் மேம்பாட்டுப் பணிகளை... மேலும் பார்க்க