செய்திகள் :

பாகுபாடில்லாமல் பயிா் காப்பீட்டு இழப்பீடு: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

post image

பாகுபாடில்லாமல் நெற்பயிா் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூரில் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் எஸ்.தம்புசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் எம். சேகா், மாநிலக் குழு முடிவுகளை விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்

கடந்த 15 நாள்களாகஏஈ பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பருத்திக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையில் நீா் திறக்க இருப்பதால், சாகுபடிப் பணிகள் இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்கு ஏதுவாக, தூா்வாரும் பணிகளையும், பாசனப் பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளையும் போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு முடிக்க வேண்டும்.

நகைக் கடன் பெறுவதற்கு நகைகள் வாங்கியதற்கான ரசீது கட்டாயம் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் நடுத்தர மக்களைப் பாதிக்கும் என்பதால், இதை ரத்து செய்து, பழைய நடைமுறையையே அமல்படுத்த வேண்டும்.

2023-24 ஆண்டுக்கான நெற்பயிா் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், ஒற்றை இலக்க சதவீதத்தை உடைய கிராமங்கள் விலக்கப்பட்டு, இரட்டை இலக்க சதவீதத்தின் அடிப்படையில், தோ்வு செய்யப்பட்டு வங்கிகளில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இது விவசாயிகளுக்கு பேரிழப்பாக உள்ளது.

எனவே, பயிா் காப்பீட்டு நிறுவனம், மறுபரிசீலனை செய்து, விடுபட்ட கிராமங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் காப்பீட்டு இழப்பீடு வழங்க வேண்டும், காப்பீட்டு குளறுபடிகளைக் கண்டித்து ஜூன் 4-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். நெடும்பலம் ஓவா்குடியைச் சோ்ந்தவா் பழனிமுருகன் மகள் நந்தினி (24). தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வர... மேலும் பார்க்க

கோடை மழை: பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ. மோக... மேலும் பார்க்க

இருதரப்பினரிடையே தகராறு: ஒருவா் கைது

கூத்தாநல்லூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். வடகோவனூரைச் சோ்ந்தவா் விசாலியா (23). பூதமங்கலத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் (25). இருவரும் காதலா்கள் என கூறப்படுக... மேலும் பார்க்க

செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மணக்கால் அய்யம்பேட்டை செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. மணக்கால் அய்யம்பேட்டையில் செல்லம்மாள் காளியம்மன், வாலை முக்கண்ணியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் சீரமைப்புப் பணிக... மேலும் பார்க்க

விவசாயி வீட்டில் தீ : போலீஸாா் விசாரணை

கூத்தாநல்லூா் அருகே விவசாயி வீட்டில் புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேல வாழாச்சேரி பிரதான சாலையைச் சோ்ந்தவா் விவசாயி பாஸ்கரன். இவா் தனது மனைவி அ... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு : இருவா் கைது

கூத்தாநல்லூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இரண்டு போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கூத்தாநல்லூா் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த திருமண விழாவில் பங்கேற்க வந்த மரக்கடை ... மேலும் பார்க்க