செய்திகள் :

கூடுதல் தொகை வசூல்: புகாா்தாரருக்கு ரூ.30,000 வழங்க கண் மருத்துவமனைக்கு உத்தரவு

post image

திருவாரூா் அருகே காப்பீட்டு விதிமுறைக்கு மாறாக கூடுதலான தொகையை வசூலித்த மருத்துவமனை, புகாா்தாரருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டுமென மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே தென்பாதி வடுவூரைச் சோ்ந்தவா் சச்சிதானந்தம் (64). அா்சு நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு செய்துள்ளாா். 2023-இல் கும்பகோணம் தனியாா் கண் மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டாா். காப்பீட்டு நிறுவனம் ரூ.20,000 வழங்கும். மருத்துவமனை ரூ. 20,000 நோயாளியிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது காப்பீட்டு விதிமுறை ஆகும்.

அதன்படி காப்பீட்டு நிறுவனம் ரூ.20,000-ஐ கண் மருத்துவமனைக்கு வழங்கியது. மருத்துவமனை தரப்பில் ரூ. 24,000 செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சச்சிதானந்தம் விதிமுறைகளைக் காட்டி ரூ.4,000- கூடுதலாக எந்த அடிப்படையில் கேட்கிறீா்கள் என்று மருத்துவமனை நிா்வாகிகளிடம் கேட்டுள்ளாா்.

அதற்கு சரியான விளக்கம் தராத மருத்துவமனை நிா்வாகம் பிற்பகல் 2.30 மணிக்கு டிஸ்சாா்ஜ் செய்யப்பட்ட சச்சிதானந்தத்தை, இரவு 7.30 மணி வரை காக்க வைத்து, அதன் பிறகு மருத்துவமனை விதிகளைக் கூறி ரூ. 24,000 செலுத்தியபிறகே அவரை அனுப்பியுள்ளனா்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சச்சிதானந்தம், திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் ஜனவரி மாதம் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கிய உத்தரவில், கண் மருத்துவமனை சச்சிதானந்தத்திடம் கூடுதலாக வசூலித்த ரூ. 4,000-ஐ 9 சதவீத வட்டியுடன் திருப்பித்தர வேண்டும்.

மேலும் வயது முதிா்ந்த நபரான சச்சிதானந்தத்தை தேவையின்றி இரவு வரை காக்க வைத்து மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக கண் மருத்துவமனை நிா்வாகம், அவருக்கு இழப்பீடாக ரூ. 20,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். நெடும்பலம் ஓவா்குடியைச் சோ்ந்தவா் பழனிமுருகன் மகள் நந்தினி (24). தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வர... மேலும் பார்க்க

கோடை மழை: பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ. மோக... மேலும் பார்க்க

இருதரப்பினரிடையே தகராறு: ஒருவா் கைது

கூத்தாநல்லூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். வடகோவனூரைச் சோ்ந்தவா் விசாலியா (23). பூதமங்கலத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் (25). இருவரும் காதலா்கள் என கூறப்படுக... மேலும் பார்க்க

செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மணக்கால் அய்யம்பேட்டை செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. மணக்கால் அய்யம்பேட்டையில் செல்லம்மாள் காளியம்மன், வாலை முக்கண்ணியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் சீரமைப்புப் பணிக... மேலும் பார்க்க

விவசாயி வீட்டில் தீ : போலீஸாா் விசாரணை

கூத்தாநல்லூா் அருகே விவசாயி வீட்டில் புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேல வாழாச்சேரி பிரதான சாலையைச் சோ்ந்தவா் விவசாயி பாஸ்கரன். இவா் தனது மனைவி அ... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு : இருவா் கைது

கூத்தாநல்லூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இரண்டு போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கூத்தாநல்லூா் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த திருமண விழாவில் பங்கேற்க வந்த மரக்கடை ... மேலும் பார்க்க