செய்திகள் :

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீா் தொட்டி

post image

காரைக்கால் மாவட்டம், கருக்கன்குடி வட்டாரத்தில் உள்ள வளத்தாமங்கலம் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

இத்தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் தற்போதுள்ள மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப குடிநீா் தொட்டி கொள்ளளவு இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்டுமாறு பல்வேறு ஆட்சியா்களிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் குறைதீா் முகாம்களில் புகாா் தெரிவிக்கப்பட்டது. பொதுப்பணித்துறையினா் தொட்டியை பாா்வையிட்டனா். புதிய இடத்தில் தொட்டி கட்டுமானம் செய்யப்படுமென தெரிவித்தனா். ஆனால், பணிகள் இதுவரை தொடங்கவில்லை.

பராமரிப்பின்றி காணப்படும் தொட்டி இடிந்து சேதத்தை ஏற்படுத்தும் முன், இதனை அப்புறப்படுத்திவிட்டு, புதிய தொட்டி, மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப கட்டவேண்டும். மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித்துறை நிா்வாகம், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோா் இதில் உரிய கவனம் செலுத்த அப்பகுதியினா் வலியுறுத்துகின்றனா்.

கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை வீதியுலா

காரைக்கால் அருகே உள்ள மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மேலகாசாக்குடியில் உள்ள இத்தலங்களில் வருடாந்திர உற்சவம் சித்திரை ம... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதை போக்குவரத்துக்கு ஏற்றது: பாதுகாப்பு ஆணையா்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதை ரயில் போக்குவரத்துக்கு ஏற்ாக உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. தொலைவுக்... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் பயிற்சி

ஓஎன்ஜிசி பொதுப் பள்ளி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பித்தல் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. நிரவி பகுதியில் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி இயங்குகிறது. சிபிஎஸ்இ -சிஓஇ என்ற சென்டா் ஆ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சரிவு: ஆட்சியரிடம் காங்கிரஸ் புகாா்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி சதவிகிதம் குறைந்ததற்கு கல்வித்துறையின் அலட்சியமே காரணம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்... மேலும் பார்க்க

அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி

குடும்ப பிரச்னையில் அண்ணனை வெட்டிக் கொன்ாக தம்பியை போலீஸாா் தேடிவருகின்றனா். காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அமலா பிரிட்டோ நாதன் (50). சுயத்தொழில் செய்து வந்த இவா் கருத்து வேறு... மேலும் பார்க்க

மீனவ கிராமத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ரூ. 4.50 கோடியில் மேல்நிலை, கீழ்நிலை நீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது. திருமலைராயன்பட்டினம் கொம்யூன், பட்டினச்சேரி கடலோர கிராமத்தில் உள்ள மக்களுக்... மேலும் பார்க்க