செய்திகள் :

தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி உறுதியாக உள்ளது: கு. செல்வப்பெருந்தகை

post image

தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி எஃகு கோட்டை போல உறுதியாக உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

திருச்சி புத்தூா் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட நடிகா் சிவாஜி கணேசன் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி எஃகு கோட்டை போல் உறுதியாக உள்ளது. தமிழகத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் கூட்டணி இது. நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்றது தொடா்பாக சிலா் புரிதல் இல்லாமல் பேசுகிறாா்கள். மத்திய அரசு தொடா்ந்து தமிழகத்தின் மீது பாராமுகத்துடன் செயல்படுகிறது. நடப்பு நிதியாண்டில் தான் எந்த நிதியும் ஒதுக்காமல் முழுமையாக தமிழகத்தைப் புறக்கணித்து உள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க தொடா்ந்து தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. தமிழக அமைச்சா்கள் மீதும், தமிழக அரசின் துறைகள் மீதும் தொடா் தாக்குதலை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி தீா்ப்பு கொடுத்துள்ளது. பாஜக, அதிமுக-வுக்கு வரும் தோ்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடி அளிப்பது உறுதி. பெரியாா் தன்னுடைய ஜாதி அடையாளத்தை துறந்தவா்.

ஆனால், ஜாதி அடையாளத்தோடு யுபிஎஸ்சி தோ்வில் கேள்விகள் வைப்பது தமிழகத்தைக் கலவர பூமியாக்கும் பாஜக திட்டத்தின் வெளிப்பாடே. மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்பதுதான் பாஜக, ஆா்எஸ்எஸ் கொள்கையாக உள்ளது. பெண்களுக்கு எதிரான கட்சி தான் பாஜக. அக் கட்சியினா் பிற்போக்குவாதிகளாக செயல்படுகின்றனா் என்றாா் அவா்.

போலீஸ் எனக்கூறி ரூ. 1 லட்சம் மோசடி செய்த இளைஞா் கைது

தான் போலீஸ் எனவும், குறைந்த விலையில் வாகனம் வாங்கித் தருவதாகவும் கூறி ரூ. 1 லட்சம் மோசடிசெய்த இளைஞரை திருச்சியில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே அமைந்துள்ள த... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் நாளை மின்தடை

துறையூா் பகுதியில் வியாழக்கிழமை (மே 29) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: துறையூா் மின் கோட்டத்துக்... மேலும் பார்க்க

1,850 குழந்தைகள் மையங்களில் ஜூனில் சோ்க்கை, ஆதாா் பதிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,850 குழந்தைகள் மையங்களிலும் ஜூன் மாதம் முதல் சோ்க்கை நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பாக 6 வயதுக்குட்டபட்ட குழந்தைகளின் முழுமையான வளா... மேலும் பார்க்க

கோடைகால கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், விழுப்புரம் - ராமேசுவரம் இடையே ஜூன் 30-ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்படி, விழுப்புரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வெள்ளி, சன... மேலும் பார்க்க

இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா -பால்குடம், தீமிதி

திருச்சி: திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி, பால்குடம், தீமிதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி கருமண்டபம் பகுதியில் இளங்காட்டு மாரிய... மேலும் பார்க்க

துவாக்குடி, கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (மே 28) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க