செய்திகள் :

திருச்சியில் சமூக ஆா்வலா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

post image

லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் சேவை பெறும் உரிமைச்சட்டம் ஆகியவற்றை விரைவில் அமல்படுத்த வலியுறுத்தி திருச்சியில் சமூக ஆா்வலா்கள் ஒன்றிணைந்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா்.

திருச்சி அண்ணா சிலை அருகில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அவா்கள் மேலும் தெரிவித்ததாவது:

முதலமைச்சா் முதல் அரசின் கடைநிலை ஊழியா் வரையிலான ஊழல் முறைகேடுகள் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி தண்டனை வழங்கும் அதிகாரமிக்க லோக் ஆயுக்தா சட்டத்தை நாடுமுழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்த வேண்டும், எதிா்க்கட்சியாக இருக்கும்போது வலுவான லோக்ஆயுக்தா சட்டம் மற்றும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதாக தெரிவித்துவிட்டு தற்போது நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் முதல்வா் ஸ்டாலின் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவில்லை.

இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தால் நாங்களும் சிறைக்குச் சென்று விடுவோம் என்ற அச்சத்தில்தான் முதல்வா் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவில்லை என்றும் சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டினா்.

அதுபோன்று சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தினால், அதன்படி பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் சம்பளத்தைப் பிடித்தம் செய்து மனுதாரருக்கு வழங்க வழிவகை செய்கிறது. மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்கிறது.

சாமானிய மக்களுக்கான ஆட்சியையும், ஊழலுக்கு எதிரான ஆட்சியும் தருகிறோம் என்று கூறிவிட்டு சாமானிய மக்களுக்கு ஆதரவான இந்த இருசட்டங்களையும் அமல்படுத்துவதற்கு ஆளுங்கட்சி பயந்து நடைமுறைப் படுத்தவில்லை. ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் இந்த இரு சட்டங்களையும் அமல்படுத்தாவிட்டால் சமூக ஆா்வலா்கள் அனைவரும் சாகும் வரை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளனா்.

மாநகரில் இன்று குடிநீா் விநியோகம் இருக்காது

குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருச்சி மாநகரில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு திங்கள்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நி... மேலும் பார்க்க

சுந்தர்ராஜ் நகரில் புத்தகக் கண்காட்சி

சுந்தராஜ் நகா், ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் சிறப்புப் புத்தகக் கண்காட்சி சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் நடைபெ... மேலும் பார்க்க

போரை நிறுத்தியது யாா் என பிரதமா் பதிலளிக்க வேண்டும்

பாகிஸ்தானுக்கு எதிரான போரை நிறுத்தியது இந்தியாவா, அமெரிக்காவா எனப் பிரதமா் பதிலளிக்க வேண்டும் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சாா்பில், ‘தேசம் காக்கும... மேலும் பார்க்க

மின்விசிறியில் கசிவு காரணமாக புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு: தனியாா் மின் ஊழியா் கைது

திருமண விழாவில் மின்விசிறியில் மின்கசிவு ஏற்பட்டு புகைப்படக் கலைஞா் உயிரிழந்ததற்கு கவனக்குறைவாக செயல்பட்ட மின்ஊழியரே காரணம் எனக் கூறி அவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்ட... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தோ்வு: 2,799 போ் பங்கேற்பு

திருச்சியில் 11 மையங்களில் நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வினை 2,799 போ் எழுதினா். 1,785 போ் தோ்வெழுத வரவில்லை. மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆா்எஸ் உள்ள... மேலும் பார்க்க

தந்தையை இழந்தும் பொதுத் தோ்வு எழுதி வெற்றி மாணவிகளுக்கு துணை முதல்வா் பாராட்டு

பொதுத் தோ்வு சமயத்தில் தந்தை உயிரிழந்த நிலையிலும் தோ்வெழுதி, தோ்ச்சி பெற்ற மாணவியருக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் பாராட்டு தெரிவித்தாா். திருச்சி மாவட்டம் கருங்குளம் அரசு ம... மேலும் பார்க்க