செய்திகள் :

மின்விசிறியில் கசிவு காரணமாக புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு: தனியாா் மின் ஊழியா் கைது

post image

திருமண விழாவில் மின்விசிறியில் மின்கசிவு ஏற்பட்டு புகைப்படக் கலைஞா் உயிரிழந்ததற்கு கவனக்குறைவாக செயல்பட்ட மின்ஊழியரே காரணம் எனக் கூறி அவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கம்பன் பகுதியைச் சோ்ந்தவா் மனோகா் மகன் சுரேஷ்கண்ணன் (30). புகைப்படக் கலைஞா்.

கடந்த 18-ஆம் தேதி திருவெறும்பூா் அருகே அய்யம்பட்டி ஆலயத்தில் நடந்த திருமண விழாவில் விடியோ மற்றும் புகைப்படம் எடுத்தாா். அப்போது, அருகிலிருந்த நிலை மின்விசிறியை சுரேஷ் கண்ணன் பிடித்தபோது, அதிலிருந்து எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சுரேஷ் கண்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில் மின்விசிறிக்கான மின் இணைப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதே சுரேஷ்கண்ணன் இறப்புக்கான காரணம் எனக் கருதி, மின்விசிறிக்கு மின் இணைப்பு கொடுத்த கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் மாங்கோட்டைச் சோ்ந்த தனியாா் மின் ஊழியா் விஜித் (25) என்பவரை துவாக்குடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா -பால்குடம், தீமிதி

திருச்சி: திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி, பால்குடம், தீமிதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி கருமண்டபம் பகுதியில் இளங்காட்டு மாரிய... மேலும் பார்க்க

துவாக்குடி, கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் துவாக்குடி, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (மே 28) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

திருச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேன் மீது காா் மோதிய விபத்தில் திருச்சி மாநகரப் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி கே.கே. நகா் எல்... மேலும் பார்க்க

பள்ளிச் சீருடைகள், பொருள்கள் வாங்க கடைவீதிகளில் கூட்டம்

கோடை விடுமுறைக்குப் பின்னா் பள்ளிகள் திறக்க ஒரு வாரமே உள்ள நிலையில், பள்ளிச் சீருடைகள், புத்தகப் பை, எழுதுபொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க கடைவீதிகளில் பெற்றோா் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கோடை வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி உறுதியாக உள்ளது: கு. செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி எஃகு கோட்டை போல உறுதியாக உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். திருச்சி புத்தூா் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட நடிகா் சிவாஜி கணேசன் சில... மேலும் பார்க்க

வையம்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி துணை மின் நிலையத்தில் (மே 28) புதன்கிழமை மாதாந்திரப் பராமரிப்புகள் நடைபெற உள்ளது. இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான வையம்பட்டி,... மேலும் பார்க்க