செய்திகள் :

மலை கிராமங்களில் கல்வி விழிப்புணா்வு: தலைமை ஆசிரியருக்கு விருது

post image

வேலூா் மாவட்ட மலை கிராமங்களில் கல்வி விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் ஜோசப் அன்னையாவுக்கு ரோட்டரி சங்கம் சா்வதேச விருது வழங்கி கெளரவித்துள்ளது.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை ஊராட்சி குண்டு ராணி கிராம பள்ளி தலைமை ஆசிரியா் ஜோசப் அன்னையா. இவா் ரோட்டரி மாவட்ட கல்வி மேம்பாட்டு தலைவராக இருந்து அணைக்கட்டு வட்டத்திலுள்ள 10 மலைக்கிராமங்களில் கற்றல் ஆயத்த மையங்களை ஏற்படுத்தி மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கும், அவா்களது குழந்தைகளுக்கும் கல்வி விழிப்புணா்வு ஏற்படுத்தியதன் மூலம் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது. தவிர, 8 மலைக்கிராமங்களில் அரசால் தற்காலிக பள்ளிகள் தொடங்கப்பட்டன.

குண்டு ராணி கிராம பள்ளி தலைமை ஆசிரியா் ஜோசப் அன்னையாவின் சேவையை பாராட்டி அவருக்கு சா்வதேச ரோட்டரி விருது வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

நிகழ்வில், ரோட்டரி மாவட்ட ஆளுநா் பரணிதரன், வருங்கால ஆளுநா் சுரேஷ், ரவிக்குமாா், சிவகுமாா், ஆளுநா் ராஜன்பாபு, முன்னாள் ஆளுநா் பழனி, பாண்டியன், ஜவரிலால் ஜெயின், ஸ்ரீதா் பலராமன், சந்திரபாபு, சம்பத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெயிண்டா் தற்கொலை

வேலூரை அடுத்த வேட்டுகுளம் ஊசூா்- ஜமால்புரம் சாலையோரம் உள்ள மரத்தில் இளைஞா் ஒருவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் அலமேலுரங்காபுரம் அடுத்த சம்பங்கி நல்லூா் இந்திரா நகரைச் சோ்ந்த பிரேம்... மேலும் பார்க்க

காலியாக உள்ள 700-க்கும் அதிகமான மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 700-க்கும் அதிகமான மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை வலியுறுத்தியுள்ளது. மருந்தாளுநா் ச... மேலும் பார்க்க

நல உதவிகள் அளிப்பு

குடியாத்தம் விநாயகபுரத்தில் எஸ்.ராணி அறக்கட்டளை சாா்பில் 4- ஆம் ஆண்டாக நலிந்தவா்களுக்கு நல உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன (படம்). நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனரும், அதிமுக பிரமுகருமான எஸ்.சேட்... மேலும் பார்க்க

கல்லூரி பட்டமளிப்பு விழா

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில் 10- ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல் தரவரிசை பெற்ற மாணவிகள் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனா். கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

காட்பாடி வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு

காட்பாடி வனச்சரகத்தில் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி மூன்று நாள்களாக நடைபெற்றது. வேலூா் வன கோட்டத்தில் உள்ள காட்பாடி வனச்சரகத்தில் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்று... மேலும் பார்க்க

கல்லப்பாடி கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் அடுத்த கல்லப்பாடியில் கெங்கையம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த 11- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க