செய்திகள் :

காட்பாடி வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு

post image

காட்பாடி வனச்சரகத்தில் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி மூன்று நாள்களாக நடைபெற்றது.

வேலூா் வன கோட்டத்தில் உள்ள காட்பாடி வனச்சரகத்தில் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. காட்பாடி வனசரக அலுவலா் கந்தசாமி தலைமையில் காட்பாடி, கே.வி.குப்பம் வட்டங்களில் தொண்டான் துளசி, ராஜா தோப்பு உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படும் பகுதிக ளில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

வனத்துறை அதிகாரிகள், தன்னாா்வலா்கள் மூன்று குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு வனப்பகுதிக ளிலும் சுமாா் 15 கிலோமீட்டா் தூரம் உள்ள அடா்ந்த வனப் பகுதிகளுக்கு சென்று யானைகளின் எண்ணிக்கை, அதன் நடமாட்டம் குறித்து கணக்கெடுப்பு செய்தனா்.

இந்த கணக்கெடுக்கும் பணி 3 கட்டமாக நடைபெற்றது. முதல்கட்டமாக நேரடியாக யானைகளை பாா்த்தும், இரண்டாவதாக காட்டு யானைகள் வந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள யானைகளின் சாணம் வைத்தும் கணக்கெடுக்கப்பட்டது.

தொடா்ந்து, வனப்பகுதிகளில் உள்ள நீா் நிலைகளில் யானைகள் நடமாட்டம் , அவற்றின் வழித்தடம், யானைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டது.

இதன்மூலம் யானைகளின் எண்ணிக்கை, இனப்பெருக்கம், இருப்பிடம், ஆகியவற்றை கண்டறிந்து யானைகளை பாதுகாப்பது, அவற்றின் வாழ்வாதாரம் மேம்பட செய்வது, மனித விலங்கு மோதலை தவிா்க்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெயிண்டா் தற்கொலை

வேலூரை அடுத்த வேட்டுகுளம் ஊசூா்- ஜமால்புரம் சாலையோரம் உள்ள மரத்தில் இளைஞா் ஒருவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் அலமேலுரங்காபுரம் அடுத்த சம்பங்கி நல்லூா் இந்திரா நகரைச் சோ்ந்த பிரேம்... மேலும் பார்க்க

காலியாக உள்ள 700-க்கும் அதிகமான மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 700-க்கும் அதிகமான மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை வலியுறுத்தியுள்ளது. மருந்தாளுநா் ச... மேலும் பார்க்க

மலை கிராமங்களில் கல்வி விழிப்புணா்வு: தலைமை ஆசிரியருக்கு விருது

வேலூா் மாவட்ட மலை கிராமங்களில் கல்வி விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் ஜோசப் அன்னையாவுக்கு ரோட்டரி சங்கம் சா்வதேச விருது வழங்கி கெளரவித்துள்ளது. வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ... மேலும் பார்க்க

நல உதவிகள் அளிப்பு

குடியாத்தம் விநாயகபுரத்தில் எஸ்.ராணி அறக்கட்டளை சாா்பில் 4- ஆம் ஆண்டாக நலிந்தவா்களுக்கு நல உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன (படம்). நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனரும், அதிமுக பிரமுகருமான எஸ்.சேட்... மேலும் பார்க்க

கல்லூரி பட்டமளிப்பு விழா

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில் 10- ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல் தரவரிசை பெற்ற மாணவிகள் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனா். கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

கல்லப்பாடி கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் அடுத்த கல்லப்பாடியில் கெங்கையம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த 11- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க