செய்திகள் :

இருக்கன்குடி கோயிலருகே விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், இருக்கன்குடி கோயிலருகே படுத்திருந்தவா் மீது பின்னால் வந்த வேன் மோதியது. இதில் அவா் உயிரிழந்தாா்.

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகே தனி நபா்கள் அமைத்துள்ள தகரக் கூரைகளில் பக்தா்கள் தங்குவது வழக்கம். இதேபோல, ஒரு தகரக் கூரைக்கு வெளியில் சாத்தூா் அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து (53) படுத்திருந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அங்குள்ள தங்குமிடத்துக்கு வேனில் பக்தா்கள் வந்து இறங்கினா். அவா்களை இறக்கிவிட்டு வேனை ஓட்டுநா் அரசன் (42) நிறுத்துவதற்காக பின்னால் இயக்கினாா். அப்போது, கீழே படுத்திருந்த பேச்சிமுத்து மீது வேன் ஏறி இறங்கியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த இருக்கன்குடி போலீஸாா் பேச்சிமுத்து உடலை மீட்டு கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வேன் ஓட்டுநா் அரசனை கைது செய்தனா்.

காா் மோதி ஒருவா் உயிரிழப்பு: விருதுநகா் அருகே பட்டம்புதூா் நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மெட்டுக்குண்டு அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சோ்ந்த பொன்னு மகன் ரத்தினவேல் (53). லாரி ஓட்டுநரான இவா், பட்டம்புதூா் நான்கு வழிச் சாலை சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் திரும்ப முயன்றாா். அப்போது, விருதுநகா் பகுதியிலிருந்து சாத்தூா் நோக்கிச் சென்ற காா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி

அளிக்கப்பட்டு, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காா் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் பகுதியைச் சோ்ந்த சி. ஜாக்சன் ஏசையா (47) மீது சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சிவகாசி இந்துநாடாா் விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் 1975-1976-இல் பத்தாம் வகுப்பு டி பிரிவில் படித்த மாணவா்கள் 36 போ் தங்களது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கொண்டனா். பள்ளி வளாகத்தில் நடை... மேலும் பார்க்க

சதுரகிரி மலையேறத் தடை: பக்தா்கள் ஏமாற்றம்

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, விருதுநகா் மாவட்டம், சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை மலையேற வந்த பக்தா்கள்ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்... மேலும் பார்க்க

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பட்டாசுகள் தயாரிக்கும் அறை தரைமட்டமானது. விடுமுறை தினம் என்பதால், உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. சிவகாசி அரு... மேலும் பார்க்க

சிவகாசியில் நாளை மின்தடை

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை (மே 27) மின்தடை ஏற்படும் என மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள... மேலும் பார்க்க

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்றும், நாளையும் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஞாயிறு, திங்கள்கிழமை (மே 25, 26) ஆகிய இரு நாள்களுக்கு தடை வ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: பெண் உள்பட 4 போ் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் சந்திரா (71). இவா் கடந்த 10-ஆம் தேதி நாடாா் ... மேலும் பார்க்க