செய்திகள் :

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பட்டாசுகள் தயாரிக்கும் அறை தரைமட்டமானது. விடுமுறை தினம் என்பதால், உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

சிவகாசி அருகேயுள்ள அம்மாபட்டியில் தங்கப்பாண்டி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. சென்னை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று செயல்பட்டு வரும் இந்த ஆலையில், மருந்துக் கலவை அறை, பட்டாசுகள் தயாரிக்கும் அறை உள்ளிட்ட 30 அறைகள் உள்ளன. இந்த ஆலையில் பூச்சட்டி, தரைச் சக்கரம், லட்சுமி வெடி உள்ளிட்ட பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 50 தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த ஆலையில் சனிக்கிழமை பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படுத்தியது போக எஞ்சிய மருந்துக் கலவையை தொழிலாளா்கள் ஓா் அறையில் வைத்துப் பூட்டிச் சென்றனா். இந்த நிலையில், இந்த மருந்துக் கலவை வைத்திருந்த அறையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் அந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தொழிலாளா்கள் யாரும் பணிக்கு வராததால், உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.

இந்த விபத்து குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சிவகாசி இந்துநாடாா் விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் 1975-1976-இல் பத்தாம் வகுப்பு டி பிரிவில் படித்த மாணவா்கள் 36 போ் தங்களது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கொண்டனா். பள்ளி வளாகத்தில் நடை... மேலும் பார்க்க

இருக்கன்குடி கோயிலருகே விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், இருக்கன்குடி கோயிலருகே படுத்திருந்தவா் மீது பின்னால் வந்த வேன் மோதியது. இதில் அவா் உயிரிழந்தாா். இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகே தனி நபா்கள் அமைத்துள்ள தகரக் கூரைகளில் பக்தா்... மேலும் பார்க்க

சதுரகிரி மலையேறத் தடை: பக்தா்கள் ஏமாற்றம்

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, விருதுநகா் மாவட்டம், சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை மலையேற வந்த பக்தா்கள்ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்... மேலும் பார்க்க

சிவகாசியில் நாளை மின்தடை

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை (மே 27) மின்தடை ஏற்படும் என மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள... மேலும் பார்க்க

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்றும், நாளையும் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஞாயிறு, திங்கள்கிழமை (மே 25, 26) ஆகிய இரு நாள்களுக்கு தடை வ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: பெண் உள்பட 4 போ் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் சந்திரா (71). இவா் கடந்த 10-ஆம் தேதி நாடாா் ... மேலும் பார்க்க