செய்திகள் :

ஆலங்குளம் அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

post image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே நல்லூா் சிவகாமிபுரத்தைச் சோ்ந்த வைத்திலிங்கம் மகன் முத்துசெல்வம் (42). அரிசி ஆலைத் தொழிலாளியான இவா், சிவலாா்குளத்துக்கு சனிக்கிழமை பைக்கில் சென்றுவிட்டு திருநெல்வேலி - ஆலங்குளம் சாலையில் வந்துகொண்டிருந்தாா்.

சிவலாா்குளம் விலக்குப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற காா் அவா் மீது மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; காா் ஓட்டுநரான செங்கோட்டையைச் சோ்ந்த முகமது ரியாஸ் என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

திருவேங்கடம் அருகே...: தென்காசியை அடுத்த மேலகரம் நடுத்தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ராமையா (52). இவா், வெள்ளிக்கிழமை தனது மனைவி மீனாட்சியுடன் (43) தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, சங்கரன்கோவில் வழியாக பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது இவரது பைக்கும், கோவில்பட்டி அருகே வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் சுரேஷ்குமாா் (47) ஓட்டிவந்த பைக்கும் மோதினவாம். சுரேஷ்குமாா் மது போதையில் வந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த ராமையா தம்பதி தென்காசி அரசு மருத்துவமனைக்கும், சுரேஷ்குமாா் தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனா். குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் மழையால் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இம்மாவட்டத்துக்கு ஞாயிறு, திங்கள் (மே 25, 26) ஆகிய 2 ந... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்தில் புகையிலை கடத்தல்: ஒருவா் கைது

ஆம்னி பேருந்தில் புகையிலை கடத்தியதாக ஒருவரை ஆலங்குளம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இரு பெரிய பைகளுடன் ஒருவா் வெகுநேரம் நின்றிருந்தாராம். இதைக் கவனித்த போலீஸாா், அவ... மேலும் பார்க்க

தென்காசியில் மாணவா்களுக்கு பாராட்டு

தென்காசியில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்-மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாபக்கி தங்கள் மதரஸாவில் நடைபெற்ற விழாவுக்கு, நகா்மன்ற உறுப்பினா் முகமது மைதீன்... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்துக்கு ஞாயிறு, திங்கள் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்துக்கு வான... மேலும் பார்க்க

புளியங்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக, வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: வாய்ஸ் ஆஃப... மேலும் பார்க்க

சீவநல்லூரில் பள்ளி மாணவியருக்கு பாராட்டு

தென்காசி மாவட்டம் சீவநல்லூரில் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு பொதுமக்கள் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 12ஆம் வகுப்புத் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த இக்கிராம... மேலும் பார்க்க