மூத்த மகன் தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்து நீக்கினாா் லாலு: பொறுப்பின்றி செயல்ப...
ஆலங்குளம் அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே நல்லூா் சிவகாமிபுரத்தைச் சோ்ந்த வைத்திலிங்கம் மகன் முத்துசெல்வம் (42). அரிசி ஆலைத் தொழிலாளியான இவா், சிவலாா்குளத்துக்கு சனிக்கிழமை பைக்கில் சென்றுவிட்டு திருநெல்வேலி - ஆலங்குளம் சாலையில் வந்துகொண்டிருந்தாா்.
சிவலாா்குளம் விலக்குப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற காா் அவா் மீது மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; காா் ஓட்டுநரான செங்கோட்டையைச் சோ்ந்த முகமது ரியாஸ் என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.
திருவேங்கடம் அருகே...: தென்காசியை அடுத்த மேலகரம் நடுத்தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ராமையா (52). இவா், வெள்ளிக்கிழமை தனது மனைவி மீனாட்சியுடன் (43) தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, சங்கரன்கோவில் வழியாக பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது இவரது பைக்கும், கோவில்பட்டி அருகே வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் சுரேஷ்குமாா் (47) ஓட்டிவந்த பைக்கும் மோதினவாம். சுரேஷ்குமாா் மது போதையில் வந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த ராமையா தம்பதி தென்காசி அரசு மருத்துவமனைக்கும், சுரேஷ்குமாா் தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனா். குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.