Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' - மனநோயா, சிக...
ரூ.1.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்: கடத்தல் கும்பலைச் சோ்ந்த மூவா் கைது
மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூன்று முக்கிய நபா்களை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து சுமாா் ரூ.1.10 கோடி மதிப்புள்ள 2,124 கிராம் சரஸ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி போலீஸாா் மேலும் தெரிவித்ததாவது:
இந்த கும்பல் இமாசலப் பிரதேசத்தின் கசோலில் இருந்து போதைப்பொருளை தருவித்துள்ளது. இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் மூவரும் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் மீட்கப்பட்டது.
முன்னதாக, கடந்த ஜனவரி 8 ஆம் தேதி போலீஸாருக்கு கிடைத்த ஒரு ரகசிய தகவலைத் தொடா்ந்து, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த நசீப் (25) மற்றும் பஞ்சாபைச் சோ்ந்த சந்தீப் (40) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து மொத்தம் 1,438 கிராம் சரஸ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவா்களிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு, இமாசலப் பிரதேசத்தின் குலுவைச் சோ்ந்த இந்தா் சிங் என்கிற இந்த்ரு கைது செய்யப்பட்டாா்.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 696 கிராம் சரஸ் பறிமுதல் செய்யப்பட்டது. கசோலின் தொலைதூர மலைப் பகுதிகளில் நசீப் மூலம் இந்தா் சிங் போதைப் பொருளை பயிரிட்டுள்ளாா். நசீப் போதைப் பொருள் சாகுபடியை மேற்கொண்டாா். சந்தீப் போதைப் பொருளை கடத்துவதற்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்தாா்.
இந்தா் சிங் முக்கிய விநியோகஸ்தராக இருந்துள்ளாா். அவா்கள் ஒன்றாகச் சோ்ந்து அதிக மதிப்புள்ள போதைப்பொருள் வலையமைப்பை உருவாக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.