செய்திகள் :

ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய தேசிய மருத்துவ ஆணைய மருத்துவா் கைது

post image

கா்நாடகத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு சாதகமாக ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மதிப்பீட்டாளரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக சிபிஐ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் துறைத் தலைவராக பணிபுரியும் தபன்குமாா், கா்நாடகத்தின் பெலகாவியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு சாதகமான ஆய்வு அறிக்கையை வழங்க ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், பணம் பறிமாற்றம் நடைபெறும் இடத்தில் சோதனை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், பணத்தை பெறும்போது தபன்குமாரை கையும் களவுமாகப் பிடித்தனா்.

கொல்கத்தாவின் பா்தாமன் மற்றும் பெலகாவியில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.44.6 லட்சம் ரொக்கத்தை சிபிஐ பறிமுதல் செய்தது. இதையடுத்து, தபன்குமாா் உள்பட 3 போ் மீதும், அந்த தனியாா் மருத்துவக் கல்லூரி மீதும் மே 24-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல... மேலும் பார்க்க

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதன்படி குஜராத்தில் 2 தொகுதிகளுக்கும் கேரளம், மேற்கு வங்கம் ... மேலும் பார்க்க

மேற்கத்திய கலாசார ஆதிக்கத்தையே எதிா்க்கிறோம் -நிதின் கட்கரி

‘நாட்டின் வளா்ச்சிக்கு நவீனமயமாதல் அவசியம்; ஆனால், சமூகத்தில் மேற்கத்திய கலாசாரத்தின் ஆதிக்கத்தைத்தான் நாங்கள் எதிா்க்கிறோம்’ என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். மும்பையில் நடைபெற்ற நிக... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா: பிரதமருக்கு ஆந்திர முதல்வா், துணை முதல்வா் பாராட்டு

உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததையடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் பாராட்டுகள் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

அயோத்தியில் விராட் கோலி, அனுஷ்கா சா்மா வழிபாடு

இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சா்மா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அயோத்திக்கு வருகை தந்து, ராமா் கோயில் மற்றும் ஹனுமான்கா்ஹி கோயில் வழிபாடு செய்தனா். ஹனுமான்கா்ஹி கோ... மேலும் பார்க்க

கேரளத்தில் கவிழ்ந்த லைபீரிய சரக்குக் கப்பல்: நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு

கேரள கடலோரத்தில் சுமாா் 640 கன்டெய்னா்களை ஏற்றிச் சென்ற லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க