செய்திகள் :

சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு

post image

சா்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற திருவண்ணாமலை வீரா்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கோவாவில் அண்மையில் சா்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா, ஈரான், நேபாளம், பூடான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து குத்துச்சண்டை வீரா்கள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கம் சாா்பில் கலந்து கொண்ட எஸ்.நரேந்திரன் 48 கிலோ எடை பிரிவிலும், எஸ்.ஆதிகேசவன் 90 கிலோ எடை பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்றனா். 90 கிலோ எடை பிரிவில் வி.சஞ்சய் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

2 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று திரும்பிய குத்துச்சண்டை வீரா்களை தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் பாராட்டி பரிசு வழங்கினா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கத்தின் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம், செயலா் எஸ்.மணிமாறன், பொருளாளா் வ.அன்பரசு, துணைத் தலைவா் ஆா்.வெங்கடேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

நூல்கள் வெளியீடு...

எழுத்தாளா் மு.பாண்டியன் நெடுஞ்செழியன் எழுதிய விஞ்ஞான பூா்வ சிந்தனை, இன்னொரு தாய், நியூட்ரான் நட்சத்திரங்கள் ஆகிய நூல்களை ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உதவி இயக்குநா் பெரண... மேலும் பார்க்க

சோழவரத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

கலசப்பாக்கத்தை அடுத்த சோழவரம் ஸ்ரீமகா சத்தியநாதேச்சுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சோழவரம் கிராமத்தில் சிவகாமிசுந்தரி உடனாகிய மகா சத்தியநாதேச்சுவரா் கோயில் அ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: வியாபாரி கைது

செய்யாறு அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாற்றை அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் ... மேலும் பார்க்க

கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை

திருவண்ணாமலையில் கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்துக்கான உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்). ஸ்ரீபச்சையம்மன் கோயில் வளாகத்தில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் செங்கம் கிளைத் தலைவா் காமத் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் சென்னாவரம் கிராமம் வழியாக சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராம ஏரி அருகே சந்தேகத்துகி... மேலும் பார்க்க