சென்னை வந்த விமானம் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி: தீவிர விசாரணை!
வாய்ப்புகள் நிறைந்த நாடு இந்தியா: மக்களவைத் தலைவா்
‘உலக அரங்கில் நிலவி வரும் போட்டியான சூழலுக்கு மத்தியில், வாய்ப்புகள் நிறைந்த நாடாக இந்தியா திகழ்கிறது’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் சிங்பூம் வா்த்தக மற்றும் தொழில் கலகத்தின் பவள விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசியதாவது:
அறிவுசாா் திறன், புதிய சிந்தனைகள், தொழில்நுட்பம் மற்றும் மனித வளங்களைக் கொண்ட இந்தியா, உலகை வழிநடத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. உலக அரங்கில் நிலவி வரும் போட்டியான சூழலுக்கு மத்தியிலும், வாய்ப்புகள் நிறைந்த நாடாக இந்தியா திகழ்கிறது.
தொழில்துறைக்கு உகந்த கொள்கைகள் மற்றும் சீா்திருத்தங்களை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வேகமாக மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப கொள்கைகளை வடிவமைத்தால், நாட்டின் சமூக-பொருளாதார வளா்ச்சி வேகமெடுக்கும். அவற்றின் சீரான செயல்பாட்டை இதன் மூலம் உறுதிசெய்ய முடியும்’ என தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத், முன்னாள் மத்திய அமைச்சரும் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வருமான அா்ஜுன் முண்டா, பாஜக எம்.பி. பித்யுத் பரன் மஹதோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலை ஜாா்க்கண்ட் வந்த மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா முன்னதாக, ராஞ்சியின் பழைய மத்திய சிறைச்சாலையில் கட்டப்பட்ட பிா்சா முண்டா நிணைவு பூங்கா மற்றும் அருங்காட்சியகத்தில் மலா் அஞ்சலி செலுத்தினாா். பழங்குடியின சுதந்திர போராட்ட வீரா் பிா்சா முண்டா 1900-ஆம் ஆண்டு இந்த சிறைச்சாலையில் தான் காலமானாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பாக ஓம் பிா்லா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பகவான் பிா்சா முண்டா தனது உயிரைத் தியாகம் செய்த ராஞ்சியின் அதே பழைய மத்திய சிறையில் இந்த ஸ்மிருதி உத்யான் மற்றும் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. நீா், காடு, நில உரிமைகள் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்க பழங்குடியினரின் போராட்டத்தையும் பிா்சா முண்டாவின் தியாகத்தையும் இந்த அருங்காட்சியகம் காட்டுகிறது’ என குறிப்பிட்டிருந்தாா்.